• Apr 25 2024

'சூப்பர் சிங்கர்' பிரித்திகாவா இது.? கிராமத்திலிருந்து வந்தவங்க இப்படி மாடர்ன் கேர்ளாக மாறிட்டாங்களே.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியைப் பொறுத்தவரை இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகின்றன. அதுமட்டுமல்லாமல் எப்போதுமே புதுமைக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்று கூட இதை சொல்லலாம். 

அதற்கு காரணம் என்னவெனில் எல்லா டிவிகளிலும் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வர இப்படி திறமையை வெளிக்காட்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதன் மூலமும் மக்களை கவரலாம் என நிரூபித்தது காட்டியது விஜய் டிவி.

இதில் ஒளிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளும் சீரியல்களுக்கு இணையான வரவேற்பை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சிக்கு ஆரம்பமானது தொடக்கம் இன்றுவரை கொஞ்சம் கூட மக்களிடம் மவுசு குறையவில்லை.


இவ்வாறாக இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கையில் தற்போது பெரியவர்களுக்கான 9வது சீசனை தொடங்கியுள்ளனர். 

சூப்பர் சிங்கரை பொறுத்தவரையில் அதில் ஏராளமானவர்கள் போட்டி போட்டுள்ளார்கள். அவ்வாறு கலந்து கொண்டவர்களில் சிலரது முகம் மக்களுக்கு இப்போதும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து இருக்கும். அப்படியானவர்களில் ஒருவர் தான் பிரித்திகா. 

கிராமத்தில் உள்ள ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் பங்குபற்றிய அந்த சீசனில் டைட்டிலை வென்று 40 லட்சம் மதிப்புள்ள வீட்டை தட்டி சென்றார். அதன் பின் சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரே ஒரு பாடலை மட்டும் பாடிய பிரித்திகா சொந்த ஊருக்கே சென்றுவிட்டார்.


இந்நிலையில் தற்போது 18 வயதாகும் பிரித்திகா சொந்தமாக யூடியூப் பக்கம், இன்ஸ்டா பக்கம் என வைத்துக்கொண்டு நிறைய வீடியோக்களை அதில் வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் இவர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதனைப் பார்த்த ரசிகர்களோ சூப்பர் சிங்கரில் வந்தவரா இவர் என ஆச்சர்யமாக கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement