டிக் டாக் மூலம் பலர் சின்னத்திரையில் நுழைந்த பிரபலங்களில் ஒருவர் தான் கேப்ரில்லா. இவர் கடந்த கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி அனைவருக்கும் பரீட்சயம் ஆனார்.
இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த ஐரா படத்திலும் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து சன்டிவியில் ஒளிபரப்பாக வரும் சுந்தரி என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.
மேலும், இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. தனது நீண்ட நாள் காதலரான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கவர்ச்சி உடையில் கணவருடன் பதிவிட்ட ரொமாண்டிக்கான புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!