• Apr 20 2024

வாய்தா பட நடிகையின் தற்கொலை விவகாரம்- காதலனிடம் விசாரித்ததில் கிடைத்த அதிர்ச்சி தகவல்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

டிக் டாக், youtube மூலம் பிரபலமானவர் தான் நடிகை  பவுலின் ஜெசிக்கா. இவருக்கு படவாய்ப்புக்கள் கிடைத்து வந்ததால் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

தொடர்ந்து ராட்சசன், தெறி, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது. அந்த படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோலில் நடித்து வந்த இவர் நாசர் நடிப்பில் வெளியான வாய்தா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.



படம் வெளியான நிலையில் ஜெசிக்கா அவரது அப்பார்ட்மெண்டில் மின்விசிறியில் தூக்கு போட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்அதாவது சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திராவை சேர்ந்த அவர் காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்திருக்கிறார். அத்தோடு  தீபாவின் ஐபோன் காணாமல் போனதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.



இவ்வாறுஇருக்கையில்  தீபாவின் காதலர் சிராஜுதின் இன்று சென்னை கோயம்பேடு போலீஸ் முன்பு ஆஜரானார். அவரிடம் நடத்திய விசாரணையில் நடிகை தீபா அவரை ஒருதலையாக தான் காதலித்து வந்தார் என்றும், ஹீரோயினாக நடிக்கும் நேரத்தில் கைகால்களில் தோல் பிரச்சனை வந்ததால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் ஐபோனை எதற்காக வாங்கி கொடுத்தீங்க, அதன் பின் எதற்காக எடுத்துட்டு போனீங்க என கேட்டதற்கு, அது தீபாவின் செல்போன் தான் என தெரிவித்து இருக்கிறார்.போலீசார் தற்போது நடத்திய விசாரணையில் சில சந்தேகங்களும் எழுந்திருக்கிறது. அதனால் அவரிடம் மேலும் தீவிர   விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement