• Mar 29 2024

திருமண பத்திரிக்கையில் இப்படி ஒரு ஸ்பெஷலா?- கௌதம் கார்த்தி மற்றும் மஞ்சிமா மோகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்பொழுது ட்ரெண்டிங் காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் தான் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன்.இவர்கள் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்பொழுது இவர்களுடைய பெற்றோர் இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இவர்களுடைய திருமணம், இந்த மாதம் (நவம்பர் 28ஆம் தேதி) நடைபெற உள்ளது.இவர்களின் திருமண ஏற்பாடுகள் தற்போது மிகவும் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இவர்களின் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள், முக்கிய நபர்கள், மற்றும் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 


எனவே நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் இருவரும் தங்களுக்கு நெருங்கிய வட்டாரத்தில் திருமண பத்திரிகையை கொடுத்து வருகிறார்கள். அதே போல் அவர்களுடைய குடும்பத்தினரும் நெருக்கமானவர்களுக்கு அழைப்புதல்கள் வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்தியின் திருமண பத்திரிக்கையின் புகைப்படம்  சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.சாதாரண பத்திரிக்கை போல் இல்லாமல், இதில் சற்று வித்தியாசத்தையும் காட்டி அனைவரது பாராட்டுகளையும் குவித்துள்ளது இந்த ஜோடி.


 அதாவது இந்த பத்திரிக்கை கையால் நெசவு செய்யப்பட்ட துணியால் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில்... ஹாண்ட் லூம்மில் தயார் செய்துள்ளனர். இந்த தகவல் வெளியே வர பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement