• Apr 25 2024

மகேஷ் பாபுவை வைத்து பக்கா பிளான் போடும் ராஜமவுலி.. பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் புதிய படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்.' போன்ற பிரமாண்ட படங்கள் பலவற்றை எடுத்து இந்தியா முழுவதும் புகழ்பெற்ற இயக்குநராக இருப்பவர் ராஜமவுலி. இவரின் படங்களை வெளிநாட்டு மொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிடுகிறார்கள். 


இந்நிலையில் தற்போது மகேஷ்பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இது சூப்பர் மேன் கதை சாயலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. இதனால் ராஜமவுலியின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 


இருப்பினும் படம் இன்னும் தொடங்கவில்லை, ஆனால் யூகங்களுக்கு பஞ்சமில்லை. பட்ஜெட், நடிகர்கள் தேர்வு, மேக்கிங் போன்ற செய்திகள் தினமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. அந்தவகையில் ஹாலிவுட் டெக்னீஷியன்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் ராஜமவுலி கைகோர்த்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. 

அதுமட்டுமல்லாது ஹாலிவுட் நடிகர்கள் இப்படத்தில் நடிக்கலாம் என்று ஒரு புதிய தகவலும் உள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு முக்கிய வேடத்தில் அமீர் கான் நடிப்பார் என்பது சமீபத்திய கிசுகிசு. அவரிடம் ராஜமவுலி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படம் சீனாவிலும் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


அத்தோடு சீனா மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, ஆஸ்திரேலியா, துபாய் என முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளார் ராஜமவுலி. மேலும் ஓடிடி நிறுவனங்களுடன் ராஜமவுலி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 


இந்நிலையில், இந்த படத்தின் உடைய பட்ஜெட் செய்தி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகேஷ் நடிப்பில் உருவாகும் இந்தப் படத்தை ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ராஜமவுலி தயாரிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது இப்படத்தை சர்வதேச தரத்திலும், லேட்டஸ்ட் டெக்னாலஜியிலும் சிறந்த முறையில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். அத்தோடு சர்வதேச அளவில் இந்திய சினிமாவின் உண்மையான பிரதிநிதித்துவத்தை உருவாக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement