• Apr 19 2024

'வினை விதைத்தவன் வினை அறுப்பான்'.. ரோஹிணி தியேட்டரைப் புறக்கணித்த சூரி ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'பத்து தல' படமானது உலகம் முழுவதும் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. அந்தவகையில் சென்னை கோயம்பேடு பகுதிக்கு அருகில் இருக்கும் ரோஹினி தியேட்டரிலும் நேற்றுக் காலை முதல் நாள் முதல் காட்சி ரசிகர்கள் பார்வைக்காக திரையிடப்பட்டது.


இதில் ரசிகர்களோடு ரசிகர்களாக குறவர் சமுகத்தை சார்ந்த குடும்பத்தினர் தங்களுக்கு பிள்ளைகளுடன் பத்து தல படம் பார்க்க டிக்கெட் எடுத்து தியேட்டருக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களிடம் டிக்கெட் இருந்தும் திரையரங்க ஊழியர்கள் அந்த டிக்கெட்டை வாங்காமல் உள்நுழைய அனுமதி மறுத்துள்ளனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இவ்வாறு பத்து தல படம் நேற்று வெளியான நிலையில், இன்று வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடித்துள்ள விடுதலை படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ரோஹிணி தியேட்டரில் வெறும் 50 சதவீதம் மட்டுமே டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் ஸ்க்ரீன் ஷாட்டுகளை ஷேர் செய்து வருகின்றனர்.


அதுமட்டுமல்லாது "நீ விதைத்த வினையெல்லாம் உன்னை வேர் அறுக்க காத்திருக்கும்" என மெர்சல் விஜய் பட வசனத்தை பதிவு செய்து ரோஹிணி தியேட்டர் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள். 


Advertisement

Advertisement

Advertisement