• Apr 19 2024

என் பின்னாடி ஒருத்தன் அடிச்சிட்டான், அவ்ளோ தான் துவைச்சு எடுத்திட்டேன்- வெளிப்படையாகப் பேசிய வரலட்சுமி

stella / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து பாலாவின் தாரை தப்பட்டை திரைப்படத்தில் கரகாட்ட கலைஞராக நடித்து பாராட்டுக்களை பெற்ற இவர், ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல், வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

குறிப்பாக வரலட்சுமி வில்லியாக நடித்த சர்கார், சண்டைக்கோழி 2 ஆகிய திரைப்படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தன. பின்னர் தமிழில் நீயா 2, டேனி, வெல்வெட் நகரம், கன்னிராசி, சேசிங், சிங்கபார்வை என ஏராளமான படங்களில் இவர் நடித்திருந்தாலும், அந்த படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.


 இதனால் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற வரலட்சுமிக்கு, அங்கு அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்து வருகின்றன.இதனால் சமீபகாலமாக தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் வரலட்சுமி. சமீபத்தில் கூட பாலகிருஷ்ணாவுடன் இவர் நடித்திருந்த வீரசிம்ஹா ரெட்டி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இருந்தது.


மேலும்  அண்மையில் உடல் எடையைக் குறைத்து மிகவும் சிலிம்மாக மாறியுள்ளார். இந்த நிலையில் அண்மையில் ஓர் படத்தின் ப்ரமோஷனுக்காக கலந்து கொண்டார் அப்போது இவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதாவது உங்களிடம் யாராவது தவறாக நடந்து கொண்டிருக்கிறார்களா என்று கேட்ட போது, ஆமாம் பப்ல ஒரு நாள் ஒரு பையன் என்னோட பின்னாடி அடிச்சிட்டான். அப்பிறம் என்ன ஆச்சு என்றால் நான் அவனைப் போட்டு மிதிமிதி என்று மிதிச்சிட்டேன். அதுக்கப்பிறம் அவன் தன்னோட பொண்டாட்டிய தொடுறதை கூட மறந்திருப்பான் அவ்வளவு மோசமாக அவனைப் போட்டு வெளுத்திட்டேன் என்று ஓபனாக கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement