• Apr 20 2024

அனைவரையும் கலாய்த்துப் போட்ட சிங்கம்புலி... படத்தில அப்போ எதுக்கு நான்...?

ammu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சிங்கம்புலி அவர்கள் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு பேசியிருந்தார். அவர் பேசுகையில், பல பிரச்சனைகளை சந்தித்ததால் நான் வெப் சீரிஸ் பக்கமே வரமாட்டேன் என்று சொன்னேன்.


நான் சூர்யா சாரை வைத்து மாயாவி என்ற படம் எடுத்தேன். அந்த படம் மற்றும் பிதாமகன் படத்தினுடைய ப்ரொடக்சன் எல்லாம் ஒருவர் எடுத்து பண்ணி இருந்தார். அவர் என்னை தொடர்பு கொண்டு ஜீ 5 ல் நீங்கள் வரணும் என்று கேட்டிருந்தார்.


அவர் கேட்டதனால் தான் நான் பண்ணினேன். முதல் டேக் எடுப்பதற்கு காலை 4 மணிக்கு புறப்பட்டோம். தாரா தான் என்கூட வந்தாங்க, பஸ்ல போனோம். அந்த பொண்ணு பெட்டியை எடுத்துக்கொண்டு போயிருச்சு, நான் எங்க போறதென்று தெரியாமல் இருந்தேன். சரியென்று நான் கால் பண்ணி கேட்டு லொட்ஜ்க்கு போனேன் அந்த லாட்ஜ்ல அந்த பொண்ணு உக்காந்து இருந்திச்சு.


ஏம்மா போகும்போதே சொல்லி இருக்கலாம் தானே என்று கேட்டேன். ஸ்டார்டிங்கே பிரச்சனையா இருக்கே என்று ஜோசிச்சேன். 6 மணிக்கு வாங்க என்று சொன்னார்கள். மதியம் தானே டேக் ஏன் இப்ப கூப்பிடுறீங்க என்று கேட்டேன்?


பலபேர் சொன்னாங்க இந்த படத்தில் இந்த கதாபாத்திரம் நீங்க பண்ணுங்க நல்லா இருக்கும் என்று. சென்னைல பெரிய வெள்ளம் வந்த நேரம் இந்த படத்தின் 2வது வெர்சன் எழுதிட்டு இருந்தாங்க. அதுக்கு பிறகு ஒரு 6 வருடம் ஆகிவிட்டது. சீன்கு போயாச்சு, அப்போதான் இது பண்ணிக்கலாமா? காமெடியா பண்ணுவமா? என்று கேட்டார்கள்.


டைரெக்ட்டர் சொன்னார் சிரிக்க கூடாது காமெடி கூடாது என்று, அப்போ ஏன் என்னைய கூப்பிடுங்க? என்று கேட்டேன். ஒரு டைரெக்ட்டர் பேப்பர் இல்லாம படம் எடுத்துட்டு இருக்காரு என்று சொன்னாங்க ஏன் பேப்பர் இல்ல என்று கேட்டதுக்கு எல்லா பேப்பரும் முத்துக்குமார் எடுத்துட்டு வந்துட்டாராம். இப்படி எல்லோரையும் கலாய்த்து கொண்டு இருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement