• Apr 24 2024

றோஸ் கலர் சேலையில் சொக்க வைக்கும் ''புன்னகை அரசி'' சினேகா! வைரல் போட்டோஸ்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் புன்னகை அரசி என்று சொல்லபப்டும் நடிகையான சினேகா 2001 ஆம் ஆண்டு  இங்கே ஒ நீலப்பக்சி என்ற மலையாள மொழி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். 

நடிகை சினேகா கடைசியாக பட்டாஸ் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது, கிறிஸ்டோபர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து சூர்யா, விஜய், தனுஷ், எனப் பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துப் புகழ் பெற்றார். இதனிடையே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசன்னாவுக்கும் ஸ்னேகாவுக்கும் விவகாரத்து ஆகி விட்டதாக தகவல்கள் பரவியது. அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், தனது கணவர் பிரசன்னாவுடன் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக்கான புகைப்படங்களை வெளியீட்டு ஸ்னேகா விவகாரத்து வதந்தி தகவலுக்கு முற்று புள்ளி வைத்தார்.

இதற்கிடையில், நடிகை சினேகாவுக்கு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட, அவ்வபோது தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களையும், தனியாக போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சேலையில் சும்மா அசத்தலான போட்டோஷுட்களை நடத்தி அதனை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இப்பொது, பிங்க் கலர் சேலையில் சும்மா அழகாக புன்னகைத்துக்கொண்டே  போஸ் கொடுத்திருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.






Advertisement

Advertisement

Advertisement