• Apr 25 2024

நடிகர் ராகாவா லாரன்ஸிற்கு வில்லனாகும் எஸ்.ஜே சூர்யா- அதுவும் என்ன படத்தில் தெரியுமா?- அது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2014 ஆம் ஆண்டு சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன், அம்பிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் ஜிகிர்தண்டா. இப்படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.இப்படத்திற்காக பாபி சிம்ஹா தேசிய விருதினையும் பெற்றிருந்தார்.

இந்தப் படம் வெளியாகி  8வது ஆண்டு விழாவை முன்னிட்டு  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில்  ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும், அதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.


இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக பிரபல நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் எஸ். ஜே. சூர்யா ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி படத்தில் நடித்திருந்தார்.இதனால் தான் இப்படத்திலும் கமிட்டாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement