• Apr 20 2024

சிவகார்த்திகேயனால் 'மாவீரன்' படத்திற்கு சிக்கலா: இயக்குநர் கொடுத்த பரபரப்பு விளக்கம்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 'மாவீரன்' படப்பிடிப்பு குறித்து இணையத்தில் பரவிய செய்திகள் குறித்து விளக்கமளித்துள்ளார் இயக்குநர் மடோன் அஸ்வின்.

 சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் கலக்கி வருகின்றார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான 'டான்' படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.

'டான்' படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் உருவான ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்தார். அத்தோடு அனுதீப் இயக்கிய இந்தப்படத்தில் சத்யராஜ், உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா, பிரேம்ஜி, நவீன் பொலிசெட்டி உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இவர் தெலுங்கில் 'ஜதி ரத்னலு' என்ற ஹிட் படத்தை கொடுத்த அனுதீப் உடன் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைத்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியது. ஆனால் இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அத்தோடு , படம் வெளியான ஒரே வாரத்தில் பல திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வாறுஇருக்கையில்  சிவகார்த்திகேயன் தற்போது 'மாவீரன்' படத்தில் நடித்து வருகின்றார். 'மண்டேலா' படத்தினர் இயக்கும் இந்தப்படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். அண்மையில் பூஜையுடன் துவங்கிய இதன் படப்பிடிப்பு சிவகார்த்திகேயன், மடோன் அஸ்வின் இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக இணையத்தில் தீயாக செய்திகள் பரவியது.

மேலும்   இதுகுறித்து விளக்கமளித்துள்ள இயக்குநர் மடோன் அஸ்வின், "படப்பிடிப்பு நிறுத்தமா? யாரு இந்தப் புரளிய கிளப்புனது? அவுட்-டோர் ஷுட்டிங் ஆரம்பிக்கிற நேரத்துல செம மழை வந்துருச்சு. இப்ப மழை நின்னதும் ஷுட்டுக்கு வந்துட்டோம். நம்பிக்கையா,வேகமா வேலை செஞ்சுட்டு இருக்குறப்ப இதெல்லாம் பாக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. ஷுட்டிங் சூப்பரா போய்ட்டு இருக்கு. படம் நல்லா வந்துட்டு இருக்கு. சீக்கிரம் தியேட்டருக்கு வரும்" என உறுதியாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement