• Apr 20 2024

100 குழந்தைகளின் அறுவைச் சிகிச்சைக்கு உதவும் 'சீதாராமம்' நாயகன்... குவியும் பாராட்டுக்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் துல்கர் சல்மான். இவர் தமி, தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களிலும் நடித்து வருகின்றார்.

அந்தவகையில் துல்கர் சல்மான் தமிழில் 'ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹேய் சினாமிகா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 


இந்நிலையில் சமீபத்தில் துல்கர் சல்மான் நடித்து தெலுங்கில் வெளியான சீதாராமம் படம் பெரியளவில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.  இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியிட்டு இருந்தனர். அங்கும் அதே அளவு வரவேற்பை பெற்றது. இதில் நாயகிகளாக மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் திறமையாக நடித்து இருந்தனர்.


இந்நிலையில் சினிமா நடிகர் நடிகைகளைப் பொறுத்தவரையில் இவர்களில் பலர் ஏழைகளுக்கு ஓசை இல்லாமல் உதவி வருகிறார்கள். அதாவது அறக்கட்டளை தொடங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனர். நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டணங்கள் வழங்கி படிக்கவும் வைக்கின்றனர். அதுமட்டுமல்லாது மருத்துவ உதவிகளும் வழங்குகிறார்கள். 


இவ்வாறான இந்த சமூக சேவை பணியில் தற்போது நடிகர் துல்கர் சல்மானும் இணைந்துள்ளார். அதாவது இவர் அறக்கட்டளை அமைப்புடன் இணைந்து 100 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவ முன் வந்து இருக்கிறார். துல்கர் சல்மானின் இந்த முயற்சியை சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள். 

Advertisement

Advertisement

Advertisement