• Apr 19 2024

கண்ணு கலங்கி, முகம் வீங்கிய படி புகைப்படம் வெளியிட்ட ஸ்ருதி-ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷின் 3 படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிகர் கமல்ஹாசனின் மூத்த வாரிசாக சினிமாவில் நுழைந்தாலும் தனது நடிப்பின் மூலம் ஒரு சில படங்களிலேயே முத்திரை பதித்தார். மேலும் அவர் தமிழில் அதிகபடங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டு இருந்தார்.

சுருதி ஹாசன் தற்பொழுது என்பிகே 107 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.இவ்வாறுஇருக்கையில் சுருதிகாசன் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அத்தோடு  டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குனர் இயக்கும் ‘தி ஐ’ என்ற படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார்.அத்தோடு  மார்க் ரவுலி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் சைக்கோ திரில்லர் ஜோனரில் உருவாகவுள்ளது. தமிழில் புதிய படவாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகின்றார்.

ஸ்ருதிஹாசன் சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் நடித்துள்ள வீர சிம்மா ரெட்டி ஆகிய படங்கள் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

 இவ்வாறுஇருக்கையில் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிடும் ஸ்ருதி நேற்று மேக்கப் இல்லாத சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருந்தார். "பர்பெக்ட் ஆன செல்பிகள் மற்றும் பதிவுகள் நிறைந்த இந்த உலகத்தில், இதோ.மோசமான ஹேர் நாள், ஜுரம் மற்றும் சைனஸ் காரணமாக முகம் வீங்கி போனது என்று கூறியிருக்கிறார்.

மாத விடாய் நாட்கள் மற்றும்... இன்ன பிற… இவற்றையும் நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன், விசித்திரமாக இரு…," என்று அந்த புகைப்படங்களுக்கான காரணத்தையும் பதிவிட்டுள்ளார். முன்னணி நடிகர்களுடன், பிரம்மாண்டப் படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் இப்படி வெளிப்படையான பதிவுகளையும், புகைப்படங்களையும் பதிவிட்டு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

திரை உலகின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வரும்ஸ்ருதிஹாசன் இப்படி வெளிப்படையாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறார்.மேலும் இப்படி இயல்பாக இருக்கும் நடிகைகளை பார்ப்பதற்கும் விசித்திரமாக தான் உள்ளது.



Advertisement

Advertisement

Advertisement