• Apr 20 2024

அந்த விடயத்தை நினைத்து திடீரென கண்ணீர் வடித்த ஷிவின்... சோகத்தின் உச்சத்தில் வெளியான வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்தனர்.

இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்னைப் பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தார்.அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். 

இதே போல, ADKவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர்.அத்தோடு விக்ரமனைப் பார்க்க அவரது தந்தை மற்றும் தாயார் வந்து இருந்தார்கள்.

இவ்வாறுஇருக்கையில் கதிரைப் பார்க்க அவரது தாயாரும் மற்றும் ஒரு பெண்ணும் வந்து இருந்தார்.ஆனால் அந்த பெண் அவரது காதலி என கூறப்படுகின்றது.இவ்வாறு அவர் வந்ததும் அவரைப்பார்த்து கதிரவன் கண்கலங்கி அழுது இருந்தார்.இந்நிலையில் தற்போது மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் ஷிவினைப் பார்த்து “நெஞ்சுக்குள்ளே இன்னார் என்று” எனும் பாடலைப்பாடுகின்றார் அமுதவாணன்.அவ்வாறு பாடும் போது ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டு இருந்த ஷிவின் பின்னர் கண்ணீர் வடித்து அழ ஆரம்பித்துவிட்டார்.அதாவது கதிரவனுக்கு காதல் இருப்பது முதன் முதலில்  ஷிவினுக்கு தெரியவந்ததை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர்வடித்து அழுதுவிட்டார்.இவ்வாறாக சோகத்தின் உச்சத்தில் இந்த ப்ரமோ நிறைவடைந்து விட்டது.







Advertisement

Advertisement

Advertisement