• Apr 24 2024

கதிரவன் கேள் ப்ஃரண்டை பார்த்ததும் கதறி அழுத ஷிவின்- அசீமை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்ட அவரது உறவினர்கள்- நடந்தது என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது தற்பொழுது அதன் இறுதிக் கட்டத்தை எட்டி வருகின்றது. அதன் படி இந்த வாரம்  Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது.இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் 81ம் நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

அதாவது இன்றைய தினம் முதலில் விக்ரமனின் அம்மாவும் அப்பாவும் வருகை தந்திருந்தனர். அவர்கள் இருவரும் விக்ரமனை நீண்ட நாளுக்கு பிறகு பார்த்ததாக கூறி கண்கலங்கியதோடு போட்டியாளர்கள் எல்லோரிடமும் பேசினார்கள். அதிலும் குறிப்பாக விக்ரமனின் அப்பா ஷிவினிடம் நீ ஒண்ணும் கவலைப்படாத. நாங்க எல்லோரும் இருக்கிறோம்.கேம் முடிஞ்சதுக்கு அப்புறம் வீட்டுக்கு எல்லாம் வா. உன்னோட Guts ரொம்ப பயங்கரமா இருந்தா பெரிய அளவுக்கு நீ வெற்றி அடைவே" என தெரிவிக்கிறார்.


பின் ஷிவினிடம் ஜாலியாக பேசும் விக்ரமன், "ஷிவினு, பெரிய ஆளா வருவியாம்." என்றும் குறிப்பிடுகிறார்.அத்தோடு விக்ரமன் திருமணம் செய்ய வேண்டும் என ஹவுஸ்மேட்ஸை கூறச் சொல்கின்றார்.இவ்வாறு ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்த போது டைம் முடிந்ததால் இருவரும் வெளியேறினார்கள்.

இதனைத் தொடர்ந்து கதிரவன் வீட்டிலிருந்து வரப் போகிறார்கள் என்பதற்காக ஷிவின் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஏடிகே ஷிவின் தன்னை பொண்ணு பார்க்க வருவதாக நினைத்துக் கெண்டு அலங்கரித்துக் கொண்டிருப்பதாக கூறி பாட்டுப் பாடி கலாய்க்கின்றார். இவருடன் ஏனைய போட்டியாளர்களும் கலாய்க்கின்றனர்.

பின்னர் கதிரவனின் அம்மா மற்றும் கேள் பிரண்ட் உள்ளே வந்தனர். இவர்களை பார்த்ததும் கதிர் எமோஷனலாகி அழுதார். குறிப்பாக கதிரவன் கேள் பிரண்டை பார்த்தும் ஷிவின் அப்செட் ஆனார். அதிலும் அமுதவாணன் ஷிவினை சுற்றி சுற்றி வந்து பாட்டுப் பாடினார் இதனால் ஷிவின் மனமுடைந்து அழுதார். இதற்கு விக்ரமன்  அவரது உணர்வை அவர் பார்த்துக் கொள்வார் என்றும், நாம் நடுவே சென்று காமெடி என்ற பெயரில் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார். மேலும், ஷிவினே அதை கையாண்டு கொள்வார்கள் என்றும் நடுவே அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் நாம் போக வேண்டும் அவரது எமோஷன்களை அவரே கையாள்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார் .


தொடர்ந்து அனைவரின் எதிர்பார்ப்பிற்கிணங்க அசீம் வீட்டிலிருந்து வந்திருந்தார்கள்.அவர்களை கண்டதும் அனைவரும் எழுந்து செல்ல திடீரென அசீம் மட்டும் Freeze-ல் இருக்குமாறு சொல்கிறார் பிக்பாஸ். இதனால் புன்னகையுடன் அவர் மீண்டும் தனது இருக்கையில் அமர்கிறார். பின்னர் கிச்சன் பகுதியில் அசீம் மீது அவரது குடும்பத்தினர் ஸ்னோ அடிக்க, சக போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகமாக ஆராவாரம் செய்கின்றனர்.

அப்போது, Freeze மோடில் இருந்து அசீமை ரிலீஸ் செய்கிறார் பிக்பாஸ். அதன் பின்னர் கார்டன் பகுதியில் அனைவரும் பேசிக்கொண்டிருக்க திடீரென அசீமை நீச்சல் குளத்திற்குள் தள்ளிவிடுகின்றனர் அவரது விருந்தினர். இதனை பார்த்து, அனைவரும் புன்னகைக்கின்றனர் இது பார்ப்பதற்கு சூப்பராக இருந்தது. இவ்வாறாக உறவினர்களின் வருகையுடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைந்ததைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement