• Apr 24 2024

கழுத்தில் பாரதி போட்ட மாலையுடன் கண்ணம்மா- அதிர்ச்சியில் உறைந்த ஷர்மிளா.. 'பாரதி கண்ணம்மா 2' எபிசோட்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'பாரதி கண்ணம்மா'. இந்த சீரியலானது விறுவிறுப்பான கதையம்சத்துடனும், அதிரடித் திருப்பங்களுடனும் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. 

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்துள்ளது என்று பார்ப்போம். இதில் கண்ணம்மா தனது அம்மாவிற்கு தேக ஆரோக்கியத்திற்கான பரிகாரம் செய்வதற்காக சக்தி வாய்ந்த ஈஸ்வரன் கோவில் ஒன்றுக்கு சென்றுள்ளார். அதுமட்டுமல்லாது தன்னுடன் வந்தவர்களிடம் இந்த பூஜை பண்ணினால் அம்மாவிற்கு சரியாகி விடுமா என்று கேட்கிறார். அதற்கு அவர்களும் ஆம் எனக் கூறுகின்றனர்.


இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் கண்ணம்மா சென்ற அதே கோவிலுக்கு பாரதி குடும்பம் திருமண தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வந்துள்ளனர். அடுத்து ஷர்மிளா மற்றும் விஜய் ஆகிய இருவரும் ஐயர் வர நேரம் ஆகும் போல் இருக்கின்றது எனக் கூறிக்கொண்டு சாமி கும்பிட போகின்றனர்.

 அங்கு கண்ணம்மா லைனில் வருமாறு கூறி அவர்களிடம் பிரச்சனை செய்கிறாள். அதற்கு ஐயர் இவங்க பெரிய இடத்தை சேர்ந்தவங்க, அதனால் தான் இவங்களுக்கு முன்னுரிமை எனக் கூறுகின்றார். பின்னர் விஜய் பிரச்சினை எதுவும் வேணாம் எனக் கூறிக் கொண்டு ஷர்மிளாவை அழைத்துக் கொண்டு போய் லைனில் நிற்கின்றார். ஷர்மிளா விஜய்யிடம் யார்டா அவ என கேட்க்கின்றார். அதற்கு விஜய் அவ தான் கண்ணம்மா எனக் கூறுகின்றார்.


இதனையடுத்து கண்ணம்மா, பாரதி ஆகிய இருவரும் வேறு வேறு இடங்களில் இருந்து பரிகார பூஜை மேற்கொள்கின்றனர். பின்னர் கோவில் குளத்தின் அருகே பாரதி ஒரு பக்கம் கண்ணம்மா ஒரு பக்கம் என பரிகாரம் செய்கின்றனர். பாரதியிடம் ஐயர் மாலையை குளத்தில் போட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் வருமாறு கூறுகின்றார்.

பாரதி பரிகார பூஜை முடித்து விட்டு மாலையை குளத்தில் போட்டு விட்டு போக கண்ணம்மா குளத்தில் மூழ்கி எந்திரிக்கும் போது அவளது கழுத்தில் வந்து சேருகிறது. இதை பார்த்த ஷர்மிளா இது பாரதி போட்ட மாலை ஆச்சே என அதிர்ச்சி அடைகிறார். கோவிலில் கண்ணம்மாவுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகிரும்,கல்யாண யோகம் வந்திருச்சு என அங்கு வந்தவர்கள் சொல்கின்றனர். மேலும் ஐயர் கல்யாணமும் ஆகிடும் அம்மாக்கு குணமும் ஆகிடும் எனக் கூறுகின்றார்.


அதன் பிறகு கண்ணம்மா வீட்டுக்கு வந்து அம்மா பாக்கியாவுக்கு பிரசாதம் கொடுத்து, என்னால தானே உனக்கு இவ்வளவு கஷ்டம் உனக்காக தொடர்ந்து 13 நாள் விரதம் இருக்க போவதாக சொல்கிறாள்‌. ஷண்முக வாத்தியார் பிரசாதம் போது கண்ணம்மாவை எல்லாத்துக்கும் காரணம் நீ தான் என் திட்டுகிறார். மேலும் பாக்கியா என் காலம் முடிந்திரிச்சு விரதம் இருந்து கஷ்டப்பட வேணாம் எனக் கூறுகின்றார். 

பின்னர் மறுபக்கம் ஷர்மிளா கண்ணம்மா கழுத்துக்கு மாலை வந்ததைக் கூறி, பாரதிக்கு ஜோடியாக அந்த கண்ணம்மா வந்துருவா போல என விஜயிடம் புலம்பி வெண்பாவுக்கு உடனடியாக போன் போட்டு இந்தியா வர சொல்ல வெண்பா ஏர்போர்ட்ல இருக்கும் விஷயத்தை சொல்கிறார். இதனையடுத்து நாளைக்கு சென்னை வந்துருவ, இனிமே என் ஆட்டம் தான் என சொல்ல ஷர்மிளா மற்றும் விஜய் சந்தோஷம் அடைகிறார்கள். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement

Advertisement