• Mar 29 2024

முதன் முறையாக இன்ஸ்டா பக்கத்தில் இணைந்த ஷாலினி... ஒரே நாளில் இத்தனை பாலோவர்களா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகை ஷாலினி. இவர் தனது திரைப்பயண ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து அசத்தி இருந்தார். 


இதனைத் தொடர்ந்து 1997-ஆம் ஆண்டு வெளிவந்த 'காதலுக்கு மரியாதை' என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கினார். இப்படத்தில் ஷாலினி நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஷாலினியின் முதல்படமே பயங்கர ஹிட் ஆனதைத் தொடர்ந்து ஷாலினிக்கு தமிழில் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கின. அந்த வகையில் அடுத்ததாக இவர் நடிப்பில் உருவான படம் 'அமர்களம்'.


இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தின் போது தான் ஷாலினிக்கும் அஜித்துக்கும் இடையே நிஜத்திலும் காதல் மலர்ந்தது. படத்தைப் போல் இவர்களது காதலும் இறுதியில் சக்சஸ் ஆனது.

இவ்விரண்டு படங்களினதும் வெற்றியைத் தொடர்ந்து 'கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும்; என தமிழில் ஷாலினி நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகி இவருக்கு வெற்றியையும், புகழையும் தேடித் தந்தன. 

அதுமட்டுமல்லாது கோலிவுட் சினிமாவில் இவர் ஒரு ரவுண்டு வருவார் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அஜித்தை திருமணம் செய்து கொண்டு, யாருமே எதிர்பார்க்காத வகையில் சினிமாவில் இருந்து ஒரே அடியாக விலகி விட்டார் ஷாலினி. தற்போது இத்தம்பதியினருக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.


அஜித்தைப் பொறுத்தவரை எப்போதுமே பப்ளிசிட்டியை விரும்பாதவர் என்பதால் அவர் சமூக வலைதளங்கள் எதையும் பயன்படுத்துவதில்லை, அதே ஃபார்முலாவை இவரின் மனைவியான ஷாலினியும் பின்பற்றி வந்தார்.  இருப்பினும் தற்போது முதன்முறையாக நடிகை ஷாலினி சோசியல் மீடியா பக்கம் காலடி எடுத்து வைத்துள்ளார்.  

இன்ஸ்டாகிராமில் ஷாலினி எண்ட்ரி கொடுத்துள்ள தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த தகவல் வெளியாகி ஒரு நாள் கூட ஆகாத நிலையில், தற்போது வரை நடிகை ஷாலினியை 36 ஆயிரம் பேர் வரை பின் தொடர்ந்து வருகின்றனர்.


அத்தோடு அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் பதிவாக தனது காதல் கணவர் அஜித்துடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படம் ஒன்றினைத் தான் பதிவிட்டுள்ளார் ஷாலினி. மேலும் ஷாலினியின் எண்ட்ரியால் இனி அஜித்தின் குடும்ப புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் அதிகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement