பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி விறுவிறுபு்புர்கு நகர்கின்றது.இதில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜனனி தற்போது பிக் பாஸ் 6ம் சீசனுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார்.
அவர் 2ம் வாரத்திலேயே கேப்டன் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு மிகச் சிறப்பாகவே விளையாடிக்கொண்டிருந்தார்.
இவ்வாறுஇருக்கையில் நேற்று ஜனனி கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார். அவர் இந்த வாரம் நடந்த டாஸ்கில் ஜெயிக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் அவருடன் எப்போதும் பேசும் போட்டியாளர்கள் கூட அவருக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.
"எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் இங்கே தனியாக இருப்பது போல உணர்கிறேன்.அத்தோடு சில பேருக்கு என்னை பிடிக்கவில்லை. எனக்கு கஷ்டமா இருக்கு" என ஜனனி கேமரா முன்பு கூறி அழுதிருக்கிறார்.
எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் ஜனனி இப்படி திடீரென கதறி அழுதது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஷாக்கை கொடுத்து இருக்கிறது.
Listen News!