• Apr 25 2024

திருமணம் முடிந்ததைத் தொடர்ந்து மணக்கோலத்தில் இருக்கும் சீரியல் நடிகை ரித்திகா- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரித்திகா தமிழ் செல்வி. இந்த சீரியலில் இவர் எழிலின் காதலியாக நடித்து வருவதோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

இந்த சீரியலில் நடிக்க முதல் இவர் ராஜா ராணி சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். இதனை அடுத்து பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றினாலும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பாலாவுடன் ரே்ந்து செய்த சேட்டைகளால் இருவரும் காதலர்களா என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.


இப்படி ஒரு நிலையில் ரித்திகா விஜய் டிவி பிரபலமான வினோத் என்பவரைக் காதலித்து எளிமையான முறையில் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவர் கோவிலில் எடுத்த புகைப்படம் வெளியாகியதால் ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.


இந்த நிலையில் தற்பொழுது தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தாலி கட்டிய பின்னர் இரவு நேரக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.இதனை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement