• Apr 20 2024

மீண்டும் பொய் சொல்லி விட்டுக் கிளம்பிய செந்தில்- உண்மையைக் கண்டு பிடித்த அமுதா- இனி நடக்கப் போவது என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் அமுதாவும் அன்னலட்சுமியும். அந்த வகையில் இந்த சீரியலில் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

 செல்வா சுமதியின் கன்னத்தில் அறைகிறான்.மேலும் செல்வா சுமதியிடம் உன் புருஷன் லட்சணம் தெரிஞ்சு தானே அவனை கல்யாணம் கட்டிகிட்ட, ஒழுங்கா அமுதா சொல்ற வேலையை செய் என சொல்ல சுமதி வெறுப்பாகிறாள்.

இந்த பிரச்சனைக்கு பிறகு வீட்டை அடகு வைத்த பணத்தில் ஒரு தங்க செயினும் ஒரு கவரிங் செயினும் வாங்கும் வடிவேலு அதை அன்னத்திடம் கொடுத்து யாருக்கும் தெரியாமல் செயினை வச்சுக்கோ என சொல்கிறான்.


பின்னர் செந்தில் குரூப் ஸ்ரடி என பொய் சொல்லிவிட்டு ஒரு பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான். அப்போது அமுதா செந்தில் மறைத்து வைத்திருக்கும் பெயிண்ட் டப்பாவை பார்த்து விட்டு மாணிக்கத்திடம் இன்னும் இவுக பொய் சொல்றதை விடவே இல்லையா, ஏன் இப்படி தொடர்ந்து பொய்யா சொல்றாக என வருந்தப்படுகிறாள்.

மேலும் செந்தில் காலேஜிற்கு வந்ததும் அமுதா பெட்டியில் துணிகளை எடுத்து வைத்து கொண்டு வீட்டை விட்டு போவதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை அறிந்து கொள்ள அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை பார்த்தால் தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement