• Mar 29 2024

விறகில் நாகு வைத்த வெடிமருந்து- காப்பாற்றிய செந்தில்-அன்னலட்சுமி குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும். அந்த வகையில் இன்றைய எபிசோடில் அமுதா வை பழி வாங்க நாகு பொங்கல் வைக்கும் விறகில் வெடிமருந்தை வைக்க ஆட்களை தயார் செய்ய அவர்களும் அதே போல் செய்கின்றனர்.

நபர் ஒருவர் விறகில் வெடிமருந்தை வைத்தவுடன் பூஜா அங்கு வருகிறாள். அந்த நபர் பூஜாவிடம் வெடி மருந்தை வைத்த விறகை எடுத்து கொடுத்து இதை உங்க அமுதா அத்தை கிட்ட கொடுத்துடு என கொடுத்து அனுப்புகிறான்.அதை எடுத்து வந்த பூஜாவும் நான் எதுக்கு அத்தை கிட்ட கொடுக்கனும், எங்க பானை பொங்கி நாங்க தானே ஜெயிக்கனும் என எண்ணியபடி நாகுவிடம் கொடுக்கிறாள்.நாகு கட்டையை அடுப்பில் வைக்க போகிறாள்.


மறுபக்கம் செந்தில் விறகு கட்டையை எடுக்க வர, அங்கு இருப்பவன் திருதிருவென முழிக்க, இங்க என்னடா பண்ணிகிட்டிருக்க என கேக்க,விறகு கட்டையில் கந்தகம் வைத்து இருப்பது தெரிய வருகிறது. உடனே செந்தில் அவனை பிடிக்க வர செந்திலை தள்ளி விட்டு ஓடுகிறான்.அடுத்து செந்தில் பூஜா எடுத்து வந்த கட்டையை நினைத்து பார்த்து செந்தில் அலறியபடியே பொங்கல் வைக்கும் இடத்திற்கு ஓடி வருகிறான். இந்த பக்கம் நாகு வெடிமருந்து இருக்கும் கட்டையை வைத்து நன்றாக தீ மூட்டுகிறாள்.

வெடி வெடிக்க போகும் நேரத்தில் செந்தில் வேகமாக ஓடி வந்து டிரம்மில் இருக்கும் தண்ணீரை தட்டி விட தண்ணீர் கவிழ்ந்து முதலில் நாகுவின் பானை கீழே சரிகிறது. அடுப்பு அணைந்து போகிறது.இதனால் நாகு என் பொங்கல் பொங்கி விடக் கூடாது என்பதற்காக செந்தில் வேண்டுமென்றே செய்ததாக சொல்லி சத்தமிடுகிறாள். செந்தில் இல்லை என வெடிமருந்து இருந்த விஷயத்தை சொல்ல அனைவரும் நம்ப மறுக்கின்றனர், பூஜா, மாமா சொல்றது உண்மை தான்.. என் கிட்ட இந்த விறகு கட்டையை ஒருத்தர் குடுத்தாரு என சொல்கிறார்.


குழந்தையை பொய் சொல்ல வச்சு தப்பிக்க பார்க்குறியா என நாகு சொல்ல நீ பண்ணலேன்னா அதை நிரூபிக்குமாறு அப்பத்தா சொல்கிறாள். செந்தில் கட்டையை எடுத்து போட்டு பற்ற வைக்க அது வெடிக்க அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.

செந்தில் ஊருக்குள் சென்று அவனை அடித்து அழைத்து வர அப்பத்தா யார் இப்படி செய்ய சொன்னது என கேட்க அன்னலட்சுமி குடும்பம் தான் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஷு தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Advertisement

Advertisement

Advertisement