• Apr 19 2024

விஜய்யை பங்கமாய் கலாய்த்த சீமான்...அதுவும் இப்படியா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

'வாரிசு' ஆடியோ லான்ச்சில் விஜய்யின் பேச்சு குறித்து பேட்டியொன்றில் கருத்து தெரிவித்துள்ளார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

 தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்பவர் நடிகர். இவர் படங்களின் வெளியீட்டை திருவிழா போல் கொண்டாட மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அத்தோடு கடந்த சனிக்கிழமை 'வாரிசு' படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. விஜய் ரசிகர்கள் மாநாடு என சொல்லும் அளவிற்கு மாஸாக நடந்து முடிந்துள்ளது 'வாரிசு' ஆடியோ லான்ச்.

2 வருடங்களுக்கு பின்னர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆடியோ லான்ச்சில் விஜய்யிடம் தொகுப்பாளர்கள், ''எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சின்ன சிரிப்புடன் கடந்து போகிறீர்களே எப்படி?'' எனக் கேட்டனர். எனினும்அதற்கு பதிலளித்த விஜய், ''பழகிப்போச்சு, தேவையான விமர்சனங்களும், தேவையற்ற எதிர்ப்பும்தான் நம்மை ஓட வைத்துக்கொண்டு இருக்கிறது'' என்று பதிலளித்துவிட்டு வழக்கம் போல குட்டிக் கதை சொல்ல ஆரம்பித்தார்.

அத்தோடு அந்த ஸ்டோரியில் ''கடந்த 1990களில் ஒரு போட்டியாளர் உருவானார். அவர் மேல இருக்கிற பயத்துல நானும் ஓட ஆரம்பித்தேன். அவருடன் போட்டிபோட்டுக்கிட்டே இருந்தேன். அந்த நடிகர் ஜோசப் விஜய். மேலும் பேசிய அவர் போட்டியாளை வெல்லவேண்டும் என்ற வெறி இருக்கணும், அந்தப் போட்டியாளர் நீங்களாக இருக்கணும். இதை நீங்களும் ஃபாலோ பண்ணுங்க'' என்று குறிப்பிட்டார். அஜித்தை சீண்டும் விதமாக விஜய் பேசியுள்ளதாக இணையத்தில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய்யின் கருத்து குறித்து பதிலளித்துள்ளார்.மேலும்  அதில், எனக்கு நான்தான் போட்டி என வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசியது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சீமான், ''இது எப்படி இருக்கு தெரியுமா.? விளையாட ஆள் இல்லையென்றால் பந்தை நாமளே சுவற்றில் எறிந்து விளையாடுவோம் இல்லையா, மேலும் கோவத்தில் இருக்கும் போது கண்ணாடி முன் நின்று திட்டிட்டுபோவோம் இல்லையா அதுமாதிரி தம்பி திரைப்பட வசனம்னு பேசிட்டார் போல, ரசிச்சுட்டு விட்ருவோம். அவருக்கு போட்டி அவரே என கருதுவது நல்லதுதான்''.

விஜய் பாதுகாப்பா நின்று விளையாடுகிறார்.அத்தோடு  எனக்கு போட்டி நான் தாங்க, என்னை விட்ருங்க என்கிறார். அது ஒரு பாதுகாப்பு விளையாட்டு. அந்த முதிர்ச்சியை நான் பாராட்டுகிறேன். இவ்வாறு சீமான் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement