• Apr 23 2024

இயக்குநர்பிரதீப் ரங்கநாதனின் லல்டுடே படத்தின் திரைவிமர்சனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறியப்பட்டவர் தான்  பிரதீப் ரங்கநாதன்.இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் லவ் டுடே.ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்றைய தினம் வெளியாகிய ரசிகர்களின் பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் படத்தின் கதைக் களம் என்ன என்று பார்ப்போம்.

உத்தமன் பிரதீப் { பிரதீப் ரங்கநாதன் } நிகிதா சாஸ்திரி { இவானா } இருவரும் காதலிக்கிறார்கள். இருவரும் இருவரை பற்றியும் முழுமையாக தெரியும் என்ற எண்ணத்தில் நெருக்கமாக பழகி வரும் நிலையில் கதாநாயகன் பிரதீப்பின் அக்கா திவ்யாவிற்கு { ரவீனா }, யோகி பாபுவுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.


ஒரு புறம் பிரதீப்பின் காதல் சென்றுகொண்டிருக்க மறுபுறம், திவ்யாவின் திருமண ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் பிரதீப் - நிகிதாவின் காதல் விஷயம், நிகிதாவின் தந்தை வேணு சாஸ்திரி { சத்யராஜ் } தெரியவர, பிரதீப்பை தனது வீட்டிற்கு அழைத்து பேசுகிறார்.

இந்த பேச்சு வார்த்தையில், பிரதீப்பின் செல் போனை, நிகிதாவிடமும், நிகிதாவின் செல் போனை பிரதீப்பிடமும் கொடுக்க சொல்கிறார். முதலில் இருவரும் தயங்கினாலும், வேறு வழியே இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய போன்களை மாற்றிக்கொள்கிறார்கள். சில மணி நேரம் செல்ல நிகிதாவின் செல் போனை ஓபன் செய்து பார்க்கும் பிரதீப் அதிர்ச்சியடைகிறார். அதே போல், பிரதீப்பின் செல் போனை ஓபன் செய்யும் நிகிதாவும் அதிர்ச்சியில் கோபத்தின் உச்சிக்கே செல்கிறார்.ஒருவரை பற்றி ஒருவருக்கு முழுமையாக தெரியும் என்று நம்பிக்கொண்டிருந்த இருவரும், செல் போனில் உள்ள விஷயங்களை பார்த்தவுடன் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி திட்டிக்கொள்கிறார்கள். கடைசியில் பிரிவின் எல்லையில் இருக்கும் இருவரும் எடுத்த முடிவு என்ன? அதற்குள் வேறு என்னென்னவெல்லாம் நடந்தது? இருவரும் காதலில் சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை..


படத்தை பற்றிய அலசல்.

குறும்படங்களில் மாத்திரமே நடித்து வந்த பிரதீப் இப்படத்தில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.இளைஞர்களுக்கு எப்படி நடித்தால் பிடிக்கும், அவர்களை நடிப்பினால் எப்படி கவரவேண்டும் என்பதை அழகாக புரிந்து வைத்துள்ளார்.இதனால் தொடர்ந்த இவருக்கு படவாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது.

இவரைப் போல கதாநாயகியாக நடித்த இவானாவும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.இவர்களைப் போல ராதிகா சரத்குமார் யோகிபாபு சத்யராஜ் திவ்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரவீனா ஆகியோரும் தமக்கு தரப்பட்ட காரெக்டரை சூப்பராக நடித்து அசத்தியுள்ளனர்.


முக்கியமாக பிரதீப்பின் நண்பர்களாக வந்த கதிர், பரத் ஆகிய இருவருக்கும் தனி பாராட்டு.இயக்கத்தில் பட்டையை கிளப்பியுள்ள பிரதீப் ரங்கநாதன், திரைக்கதையை வெறித்தனமாக செதுக்கியுள்ளார். துவக்கத்தில் இருந்து இறுதி வரை துளி கூட Lag இல்லாமல் வடிவமைத்துள்ளார். இளைஞர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் படத்தை உருவாக்கியதற்கு இயக்குனருக்கு தனி பாராட்டு எனலாம்.

யுவனின் பாடல்களும், படத்திற்கு பக்கபலமாக இருக்கின்றது.மேலும் இளைஞர்களைக் கவரும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெறும் என்றும் வசூலில் அள்ளிக் குவிக்கும் என்றும் நம்பப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement