தமிழில் முக்கியத் தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.அதிலும் குறிப்பாக பெண்களை மையப்படுத்தி பல சீரியல்கள் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது. இதனால் இந்த சீரியல்களுக்கான மவுஸ் அதிகரித்துக் காணப்படுகின்றது.
அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி சீசன் 2. திருமணத்திற்குப் பிறகு தனது ஐபிஎஸ் கனவுக்காக போராடும் பெண் குறித்தே இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் இந்த சீரியலில் தற்பொழுது ஒரு திருப்பு முனை ஏற்பட்டுள்ளது.
அதாவது சந்தியாவின் கனவை நிறைவேற்ற ஏகப்பட்ட தடைகள் வந்த நிலையில் தற்பொழுது சரவணன் மற்றும் செந்தில் ஆகியோர் தமது ஊர் சங்கத் தேர்தலுக்காக போட்டியிட உள்ளனர். அதுவும் எதிர் எதிர் அணியில் இவர்கள் மோதுவதால் இவர்களுக்கிடையே விரிசல் ஏற்படப் போகின்றது போல அதிரடியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது எனலாம்.
Listen News!