• Apr 20 2024

இரண்டு திருமணம் செய்தும் விடாத அந்த ஆசை... 3ஆவது மனைவிக்கு ஏங்கும் சரத்பாபு...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரைப்படங்களை பொறுத்தவரைக்கும் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளே பெரும்பாலும் மக்கள் மனதில் பிரபலமாக உள்ளார்கள். அதைத்தாண்டி அவர்களுடன் துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு சில நடிகர்கள் மக்கள் மத்தியில் தெரியாமலேயே போய் விடுகின்றனர். 


இந்நிலையில் பல துணை நடிகர்கள் என்னதான் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் அவர்கள் பெரிதும் பிரபலமடைவதில்லை. இருப்பினும் அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை பல முன்னணி நடிகர்களுடன் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவ ஒருவர் தான் சரத்பாபு. 

தற்போது 71 வயதாகும் சரத்பாபுவின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதாவது இவர் தனது 22 ஆவது வயதில் தெலுங்கு நடிகை ராமா பிரபா என்பவரை மணந்தார். சில வருடங்களில் அவரை விவாகரத்துச் செய்த சரத்பாபு பின்னர் மூத்த வில்லன் நடிகரான என்.எம் நம்பியாரின் மகளான சினேகா நம்பியாரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.


இவர்கள் இருவரையும் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்த பின்னர் 2011 இல் சட்டபூர்வமாகப் பிரிந்தனர். இவ்வாறாக 2திருமணங்களும் தோல்வியில் முடிந்தும் 3ஆவதாக திருமணம் செய்து கொள்ளும் ஆசை அவருக்கு இன்னமும் இருக்கின்றது. அதனால் 61 வயதில் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார்.

அந்தக் காலத்தில் இது குறித்த அறிவிப்புக் கூடப் பரபரப்பாக வெளியாகி இருந்தது. இதனால் அவர் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. இதற்கு சரத்பாபு "எனக்கு 60 வயது ஆகின்றது, நான் இன்னும் இளமையாகவே இருக்கின்றேன், மனதளவில் மட்டுமல்ல உடலளவிலும் எனக்கு வயசாகவில்லை" எனப் பதிலளித்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து இவர் 3ஆவதாக யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகின்றார் என்பது குறித்த கேள்விகள் எழும்பியிருந்தன. அந்தசமயத்தில் அவர் நமீதாவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  புகைப்படம் வெளியாகியது. இதனால் அவர் நமீதாவை திருமணம் செய்து கொள்ளப் போகின்றார் என்ற செய்தி கூட பரபரப்பாக வெளியாகி இருந்தது. 

அதில் உண்மை எதுவும் இல்லை எனக் கூறிய சரத்பாபு தனது 3ஆவது மனைவி யார் என்பது பற்றி மட்டும் இதுவரை குறிப்பிடவில்லை. இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகியும் இன்றுவரை இவரது 3ஆவது மனைவி யார் என்பது யாருக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைக் கேள்விப்பட்ட நெட்டிசன்கள் பலரும் இந்த வயதிலும் உங்களுக்கு இது தேவைதானா எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டு விளாசி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement