• Apr 25 2024

இறக்கப் போவதை முன்கூட்டியே அறிந்த சரத்பாபு... அவர் பேசிய கடைசி வார்த்தை இதுதான்... கவலையில் ரசிகர்கள்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் சரத்பாபு இறப்பதற்கு முன்னாடியே அவர் இறந்து போய் விட்டதாக முன்னர் ஒரு சில வதந்திகள் பரவி இருந்தன. இதனையடுத்து "சரத்பாபு கூடிய சீக்கிரமே மீண்டு வந்திடுவார், அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை" என அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.  


மேலும் இவரின் சகோதரி இவ்வாறான வதந்தியால் ரொம்பவே கோபத்தில் இருந்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டிருந்தார். அத்தோடு இந்த விஷயம் குறித்து அவர் சரத்பாபுவிடமும் கூறி இருக்கின்றார். அதாவது "நீ நல்லா இருக்கும் போதே இறந்து விட்டதாக நியூஸ் போடுறாங்க, பார்க்கிறதற்கே ரொம்ப கஷ்டமாக இருக்கு, உயிரோட இருக்கிற ஆளை சாகடிக்க இவங்களுக்கு எப்படித்தான் மனசு வருதோ தெரியல" எனக் கூறியிருந்தார். 


அதற்கு சரத்பாபு "எனக்கொண்ணும் பிரச்சினை கிடையாது, இதில் என்ன இருக்கின்றது, நான் பெட்டில் அட்மிட் ஆகி இருக்கேன், இறக்கப்போறேன் என்று எனக்கே தெரியுது. என் உடல்நிலை மோசமாக இருக்கின்றது என்று டாக்டர்களே சொல்லி இருக்காங்க, அதனால் கூட இப்படி ஒரு நியூஸ் பரவி இருக்கலாம். 


இதை எல்லாம் வச்சு மனத்தைக் குழப்பிக்காதீங்க" என சரத்பாபு அவர்கள் சகோதரியிடம் ரொம்ப எதார்த்தமாக பேசி இருக்கின்றார்.இவ்வாறு இருந்த சரத்குமார் திடீரென இறந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவலையை ஏற்படுத்தி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement