• Apr 19 2024

லியோ படப்பிடிப்பில் சஞ்சய் தத் செய்த செயல்..வியந்து பார்க்கும் தளபதி..!

Aishu / 10 months ago

Advertisement

Listen News!

லியோ படப்பிடிப்பில் சஞ்சய் தத் அனைவரிடமும் சகஜமாக பழகி வருவதை பார்த்து விஜய் உட்பட அனைவரும் வியந்துள்ளனர். மேலும் விஜய் சஞ்சய் தத்துடன் இதன் காரணமாக நெருங்கி பழகி வருகின்றார்

 விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் லியோ. இப்படமும் விக்ரமை போல ஒரு மல்டி ஸ்டாரர் படமாகவே உருவாகி வருகின்றது. படத்திற்க்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருவதால் இபபடத்தின் ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு பலகோடி லாபம் கிடைத்துள்ளது.

படத்தின் டிஜிட்டல் உரிமை, டப்பிங் ரைட்ஸ் உட்பட படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட 400 கோடியை எட்டியுள்ளது. எனினும் இதற்கு விஜய்யின் நட்சத்திர அந்தஸ்து ஒரு காரணம் என்றாலும் படத்தின் மீது இருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பே மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.

அத்தோடு இதுவரை தோல்வியே கண்டிராத லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானார். இதையடுத்து அவர் விஜய்யுடன் இணைகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது. மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா இப்படத்தில் நடிக்கின்றார். இதைத்தொடர்ந்து சஞ்சய் தத், மிஸ்கின், மன்சூர் அலி கான், கௌதம் மேனன் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இதுவும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.இவ்வாறுஇருக்கையில்  லியோ படப்பிடிப்பில் மிஷ்கினுடன் நெருங்கி பழகிய விஜய் தற்போது சஞ்சய் தத்துடனும் நல்ல பழக்கத்தில் இருக்கிறாராம்.

அதற்கு காரணம் சஞ்சய் தத் மற்றவர்களிடம் பழகும் விதம் தான் என்கின்றனர். என்னதான் பாலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோவாக சஞ்சய் தத் இருந்தாலும் லியோ படப்பிடிப்பில் அனைவரிடமும் எளிமையாகவும், எத்ரரதமாகவும் பழகி வருகிறாராம். அத்தோடு தன் போர்ஷன் முடிந்துவிட்டால் கேரவனுக்கு செல்லாமல் மற்றவர்களிடம் அமர்ந்து பேசி வருகிறாராம் சஞ்சய் தத்.

நடிகர்களிடம் மட்டுமல்லாமல் உதவி இயக்குனர்களிடமும் நெருக்கமாக பழகி வருகின்றார். எனினும் இதையெல்லாம் பார்த்த விஜய்க்கு சஞ்சய் தந்தை மிகவும் பிடித்து விட்டதாம். மேலும் ஒரு பாலிவுட் பிரபலம் தமிழில் முதன் முதலாக நடிக்கின்றார். அவ்வாறு இருக்கையில் இவ்வளவு எளிமையாக அனைவரிடமும் பழகுகின்றாரே என சஞ்சய் தத்தைதளபதி வியந்து பார்த்து வருகிறாராம்.

எனவே தான் ஷூட்டிங் முடிந்து பல மணி நேரம் சஞ்சய் தத்துடன் அமர்ந்து பேசி வருகின்றார் தளபதி. அத்தோடு விஜய் சஞ்சய் தத்தை பார்த்து இம்ப்ரஸாகி அடுத்தடுத்த படங்களில் அவரை நடிக்க வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையாம். அந்த அளவிற்கு சஞ்சய் தத்துடன் விஜய் நெருங்கி பழகி வருகின்றார்.

இவ்வாறுஇருக்கையில்  முதலில் லியோ படத்தில் சஞ்சய் தத் கொடூரமான வில்லனாக நடிப்பதாக தகவல் வந்தது. ஆனால் தற்போது லியோ படத்தில் விஜய்யின் தந்தையாக சஞ்சய் தத் நடிப்பதாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement