• Apr 20 2024

திருப்பதியில் சாமி தரிசனம்-விக்கியுடன் வந்தவேளை கையை பிடித்த நபர்- கடுப்பில் நயன் செய்த செயல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கும் நயன்தாரா நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்ட நிலையில் பல ஆண்டுகளின் பின்னர் நேற்று இவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. தற்போது சமூகவலைத்தளம் முழுவதும் பேசப்பட்டு இருக்கும் ஒரே விஷயம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் தான்.

இவ்வாறு இருக்கையில் இவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும், நயன்தாராவின் திருமணத்திற்காக மும்பையில் இருந்து மேக்கப் ஆர்டிஸ்ட் வந்து இருந்தார். எனினும் குறிப்பாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்டவர்களுக்கு மேக்கப் ஆர்டிஸ்ட் பணிபுரிந்தவர் தான் நயன்தாராவுக்கும் மேக்கப் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். திருமணத்தில் வெளியாட்கள் யாரும் பங்கேற்பதற்கு அழழைப்பு விடுக்கப்படவில்லை.. திருமணத்திற்கு வருபவர்கள் அழைப்பேசி, கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.

நேற்று திருமணம் முடிந்த நிலையில் இன்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்தார்கள்.

அத்தோடு இருவரும் தரிசனம் முடித்து விட்டு வெளியில் வந்த போது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தார்கள். மேலும் அவர்களுக்கு போஸ் கொடுக்க நயன்தாரா நின்ற போது பின்னால் இருந்த ரசிகர் ஒருவர் திடீரென நயன்தாராவின் கையை பிடித்தார்.

இதனால் கடுப்பான நயன்தாரா அந்த நபரை ஒரு முறை முறைத்துவிட்டு எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.

நயன்தாரா இதுபோல பொது இடங்களில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகும் முதல் முறை இது கிடையாது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா சமந்தா சேதுபதி நடிப்பில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படத்தை காண்பதற்காக நயன்தாரா சென்னையிலுள்ள வந்திருந்தார். எனினும் அப்போது கூட்ட நெரிசலில் ரசிகர் ஒருவர் நயன்தாராவின் கையை பிடித்து எழுத்தா அப்போதும் நயன்தாரா எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement