• Apr 25 2024

கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா.. இயக்குநர் வம்சி கூறிய கருத்து..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்பவர் நடிகை சமந்தா.இவர் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டார்.

தற்போது இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனிடையே சமீப காலமாக சமந்தாவிற்கு முகத்தில் ஒரு பிரச்சனை இருப்பதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள அவர் அமெரிக்கா சென்று திரும்பியதாகவும் ஒரு செய்தி இணையத்தில் தீயாய் பரவி வந்தது.

 இருந்தாலும் சமந்தா தரப்பில் இருந்து எந்த ஊரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேசமயம் சமந்தா சமீப காலமாக எந்த ஒரு புகைப்படமும் வெளியிடாத நிலையில் ரசிகர்கள் இதனை உறுதி செய்துள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில்  மயோசிடிஸ் என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமந்தா சற்று முன் தெரிவித்துள்ளார்..கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே படத்திற்கு டப்பிங் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட அவர், இன்னும் சில மாதங்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

 ஒரு நாள் கூட இந்த வலியை தாங்க முடியவில்லை,இருப்பினும் இதுவும் கடந்து போகுமென அவர் பதிவிட்டுள்ள நிலையில் அவரின் ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சமந்தா விரைவில் குணமடைவீர்கள் என தெலுங்கு இயக்குநர் வம்சி வாழ்த்து தெரிவித்துள்ளார். நீங்கள் எப்போதுமே ஒரு போராளி தான் சாம். எதாலும் உங்களை தடுத்து நிறுத்த முடியாது, விரைவில் குணமடைவீர்கள் என்று நம்பிக்கையாக பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement