• Apr 25 2024

அந்த விஷயங்களை சமந்தா உடனே நிறுத்த வேண்டும்! நடிகர் மனோஜ் பாஜ்பாய் அட்வைஸ்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சென்னை பல்லாவரத்து பெண்ணான சமந்தா, தன்னுடைய நடிப்பு திறமையால் கோலிவுட், டோலிவுட் திரையுலகை தாண்டி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பட வாய்ப்புகளை கைப்பற்றி நடிக்க ஆயத்தமாகி விட்டார். இவரின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணம் நடிப்பின் மீது இவருக்கு உள்ள காதல் என்றே கூறலாம்.

 தெலுங்கு திரையுலக நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, கணவர், குடும்பம், நடிப்பு என அனைத்தையும் நேர்த்தியாக கொண்டு சென்ற நிலையில், திடீர் என கடந்த 2021 ஆம் ஆண்டு கணவர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற உள்ளதாக அறிவித்தார்.

கணவருடனான விவாகரத்து முடிவால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா, அதில் இருந்து மீள்வதற்காக ஆன்மீக யாத்திரை மற்றும் தன்னை பிசியாக வைத்துக்கொள்ள பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தினார்.

மேலும் தொடர்து தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்திவந்த சமந்தாவின் வாழ்க்கையில், இடி விழுந்தது போல் இவருக்கு மயோசிட்டிஸ் பிரச்சனை தாக்கம் ஏற்பட்டது. சுமார் 6 மாதத்திற்கு மேலாக இந்த பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் சமந்தா, தொடர்ந்து அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

மெல்ல மெல்ல... பழைய நிலைக்கு திரும்பியுள்ள இவர் மீண்டும் படப்பிடிப்பு, உடல்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தி வரும் நிலையில், சமந்தாவுடன் இந்தி வெப் தொடரான 'ஃபேமிலி மேன்' வெப் தொடரில், நடித்த நடிகர் மனோஜ் பாஜ்பாய் சமந்தாவிற்கு நேர்காணல் ஒன்றில் அட்வைஸ்  கூறியுள்ளார்.

"சமந்தா மிகவும் கடினமாக உழைப்பவர், அவர் physical ஆக செய்யும் விஷயங்களை பார்த்து நான் பார்ந்துள்ளேன், அவருக்கு வலி கொடுக்க கூடிய விஷயங்களை அவர் உடனடியாக நிறுத்த வேண்டும், எளிமையானவற்றை செய்ய வேண்டும் என தெரிவித்தார். 


Advertisement

Advertisement

Advertisement