• Apr 19 2024

துபாயில் குழந்தையுடன் ஷாப்பிங் செய்த சாயிஷா...திடீரென தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான பத்து தல படத்தில் ராவடி பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகை சாயிஷா. இவர் தற்போது துபாயில் தன்னுடைய மகளுடன் ஷாப்பிங் செய்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு  ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சாயிஷாவின் மகள் இப்போதுதான் பிறந்த மாதிரி இருந்தது, ஆனால் மளமளவென வளர்ந்து நிற்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஆர்யா- சாயிஷா  இருவரும் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கோலிவுட்டின் நட்சத்திர தம்பதியர்கள் ஆக இருக்கும் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அத்தோடு  சாயிஷாவின் மகள் ஆரியானா கைக்குழந்தையாக இருக்கும் புகைப்படமும்  சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

அத்தோடு  திருமணம் ஆகி குழந்தை பிறக்கும் வரை எந்தப் படங்களிலும் கமிட் ஆகாத சாயிஷா இப்போது பத்து தல படத்தின் மூலம் குத்தாட்டம் போட்டு மறுபடியும் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதன்பிறகு அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் எண்ணத்துடன் தான் இருக்கிறார்.

இருப்பினும்  சாயிஷாவிற்கு டாப் நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் மறுபடியும் தன்னுடைய குழந்தை மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட ஆரம்பித்து விட்டார். இவ்வாறுஇருக்கையில் சாயிஷா துபாயில் தன்னுடைய மகள் ஆரியானாவுடன் ஷாப்பிங் செய்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவுகிறது.



Advertisement

Advertisement

Advertisement