• Mar 29 2024

43 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்த சச்சின் பட நடிகை- வாழ்த்துத் தெரிவித்து வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாலிவூட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை பிபாஷா .தமிழில் நடிகர் விஜய் நடித்த 'சச்சின்' படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார் . இதனை அடுத்து பாலிவூட்டில் அதிக படங்களில் நடித்து வந்த இவர்  தன்னுடைய கணவர் கரண் சிங் குரோவரை,  ‘அலோன்’ படப்பிடிப்பில் சந்தித்தார். 

இதன் பின்னர் இருவரும் ஒரு வருடம் டேட்டிங் செய்த பின் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன் படி இந்த ஜோடிக்கு கடந்த ஏப்ரல் 30, 2016 அன்று திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் அதிகம் திரைப்படங்களில் நடிக்காத இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார்.


அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார்.அத்தோடு நிறைமாத கர்ப்பத்துடன் நிற்கும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இவருக்கு இன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.


இந்த தகவலை பிபாஷா பாசு மற்றும் கரண் சிங் குரோவர் தம்பதி விரைவில் அதிகார பூர்வமாக அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது. மேலும் தாயும் - குழந்தையும் நலமாக உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement