• Apr 20 2024

கணவனோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரித்திகா-என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

குக்வித் கோமாளி புகழ் ரித்திகாவின் பதிவு தற்போது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரித்திகா தமிழ் செல்வி. இந்த சீரியலில் இவர் எழிலின் காதலியாக நடித்து வருவதோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.


இந்த சீரியலில் நடிக்க முதல் இவர் ராஜா ராணி சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். இதனை அடுத்து பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றினாலும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பாலாவுடன் ரே்ந்து செய்த சேட்டைகளால் இருவரும் காதலர்களா என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் ரித்திகா விஜய் டிவி பிரபலமான வினோத் என்பவரைக் காதலித்து எளிமையான முறையில் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவர் கோவிலில் எடுத்த புகைப்படம் வெளியாகியதால் ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் என தனது கணவருடனான புகைப்படத்தை இட்டு நன்றி தெரிவித்துள்ளார் ரித்திகா.


இதோ அந்த பதிவு...




Advertisement

Advertisement

Advertisement