• Apr 19 2024

'காந்தாரா' பார்த்து மெர்சலான ரஜினி... ஆனந்தக் கடலில் மூழ்கிய ரிஷப் ஷெட்டி செய்த செயல்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் காலத்திற்கு காலம் பல படங்களும் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. இதில் ஒரு சில படங்கள் அதிகளவிலான பட்ஜெட்டிலும், வேறு சில படங்கள் குறைந்தளவிலான பட்ஜெட்டிலும் உருவாகின்றன. 


அந்தவகையில் தமிழ், தெலுங்கு படங்களைப் போலவே சமீபகாலமாக கன்னட மொழி படங்களும் இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகின்றன. அதாவது முன்னர் 'கே.ஜி.எஃப்' படத்தை இந்திய சினிமாவே கொண்டாடிய நிலையில், தற்போது மற்றுமொரு கன்னட படமான 'காந்தாரா'வையும் கொண்டாடத் தொடங்கி உள்ளனர். 


அதாவது ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள இப்படம் தான் தற்போது இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படமானது கடந்த மாதம் ரிலீசானது. கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்ட இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். 


இதையடுத்து இப்படமானது பான் இந்தியா அளவில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தை பார்த்து வியந்துபோன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய ட்விட்டரில், இப்படத்தின் இயக்குநரையும், இப்படத்தில் பணியாற்றிய படக்குழுவினரையும் வெகுவாகப் புகழ்ந்து பாராட்டியிருந்தார்.


அதாவது "காந்தாரா இந்திய சினிமாவின் தலைசிறந்த படம்" என அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். சூப்பர்ஸ்டாரின் இந்த வாழ்த்து படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருந்தது. இவ்வாறாக காந்தாரா படம் பார்த்து விட்டு பாராட்டிய ரஜினிகாந்தை, அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ள இயக்குநர் ரிஷப் ஷெட்டி, அவரிடம் நன்றி தெரிவித்ததோடு, அவரது காலில் விழுந்து ஆசியையும் பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement