தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றுள்ளார்கள் அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த பல்வேறு கலைஞர்கள் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகின்றனர்.அவ்வாறு ஜொலித்து கொண்டு இருப்பவர் தான் ரியோ ராஜ்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.
கனா காணும் காலங்கள் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடவே ரியோ ராஜ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒருமுகமாக மாறிவிட்டார். அதன் பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார் ரியோ.அத்தோடு ரியோ, சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலான சரவணன் மீனாட்சியின் மூன்றாவது சீஸனில் நடித்திருந்தார்.
அனைவரும் எதிர்பார்த்தது போல அந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது இதை தொடர்ந்து சினிமாவில்இவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
இவ்வாறுஇருக்கையில் நடிகர் ரியோ, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி ஆம் தேதி, ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் பிறந்தனர். தன் மகளுக்கு ரியோ + ஸ்ருதி என்ற இரண்டு பெயரையும் கலந்து ரித்தி என்று பெயர் வைத்தனர்.
இந்நிலையில் இவரின் மகளின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.இதோ அந்த புகைப்படம்...
Listen News!