• Apr 19 2024

மீண்டும் உருவெடுக்கும் விஜயகாந்த் மற்றும் வடிவேலு பிரச்சினை- வைகைப்புயல் இப்படி சொன்னாரா?- உண்மையை உளறிய பிரபலம்

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் நடிகர் வடிவேலுவுக்கும், விஜய்காந்திற்கும் இடையே உள்ள சண்டை . தேர்தலில் திமுக கட்சிக்கு ஆதரவாக பேச சென்ற வடிவேலு, விஜயகாந்தை தாக்கி பல விஷயங்களை பேசினார்.இதனால் சினிமாவில் அவரை பலருக்கும் பிடிக்காமல் போனது. 

சமீபகாலமாக கூட வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் நேரலையில் அவரை திட்டி பேசியதை பார்த்தோம்.இந்நிலையில், வடிவேலுவின் நண்பரும், பல வருடங்களாக அவருடன் பழகி வரும் வி.சி.கே பழனி என்பவர் வடிவேலு மற்றும் விஜயகாந்த் குறித்து பேசியுள்ளார்.அவர் கூறியதில், " பலரும் கூறுவது போல் வடிவேலு கிடையாது. 


அவர் மிகவும் நல்ல மனிதர். அவரது வீட்டில் வேலை செய்த பெண் 50 பவுன் நகையை திருடிவிட்டார். அதை கூட அவர் பெரிதாக்க வில்லை. நான் இல்லாமல் சினிமா இல்லை என அடிக்கடி சொல்வார். அவரை பற்றி வரும் மீம்ஸ்களை பார்த்து ரசிப்பார்".

"வடிவேலுவை பற்றி இப்போது தவறாக பேசுபவர்கள் யாரும் அவர் வாய்ப்பில்லாமல் வீட்டில் இருந்த போது வந்து பார்க்கவில்லை. மாமன்னன் படத்திற்கு பின் வடிவேலுவை 10 வருடங்கள் அசைக்க முடியாது"."விஜயகாந்த் மீது அவருக்கு பெரிய கோபம் இல்லை. ‘நல்ல மனுஷன்தான். உடம்பு சரியில்லாம இருக்காரு.. 


எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.. அவர் நல்லவர்தான்.. அவரின் வீட்டில்தான் சிலர் சரியில்லை’ என வடிவேலு என்னிடம் கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு நல்லவர். அவரை திட்டியவர்களை கூட அவர்கள் பாவம் என்றுதான் சொல்லியிருந்தார்" என வடிவேலு கூறியதாக வி.சி.கே பழனி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement