• Apr 20 2024

ரன்வீர் சிங்-தீபிகா படுகோனே விவாகரத்தா..? தீயாய் பரவும் தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே. இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு செய்து கொண்டனர். 


சமீபத்தில் இந்திய அளவில் 2022ம் ஆண்டின் பிரபலங்கள் என்ற பட்டியலை கிரால் ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ளது. 25பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள அந்த வரிசையில் இந்தியாவின் பிரபலமான நபராக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் முதலிடம் பெற்றுள்ளார். 


மேலும் இதில் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற ஒரு பிரபல தனியார் நிகழ்ச்சியில் ரன்வீர் சிங்கும் தீபிகாவும் கலந்துகொண்டனர். 

அந்த நிகழ்விற்கு இருவரும் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த சமயத்தில் தீபிகாவின் கையை பிடிக்க முயன்றார் ரன்வீர் சிங். ஆனால், தீபிகா படுகோனே ரன்வீர் சிங்கின் கையை பிடிக்காமல் உதறி விட்டுவிட்டார். அதுமட்டுமில்லாமல் ரன்வீர் சிங்கை முகம் கொடுத்துக் கூட கொஞ்சமும் பார்க்கவே இல்லை. 


இதன் காரணமாக சற்றுக் கடுப்பான ரன்வீர் சிங் வேகவேகமாக முன்னால் நடந்து சென்றுவிட்டார். இது குறித்த வீடியோ ஆனது டுவிட்டர் உட்பட ஏராளமான சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சினை என்றும், விவாகரத்து செய்யப் போகிறார்களா எனவும் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாது சில மாதங்களாகவே ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் மண வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லையென்றும் அதனால் தான் தீபிகாவுக்கு சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் விவாகரத்து செய்ய முடிவடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தீயாக பரவி வருகிறது. இருப்பினும் இதுவரை இருவரும் இதுபற்றி அதிகாரபூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Advertisement

Advertisement

Advertisement