• Mar 19 2024

பழனியோடு பாக்கியா சிரித்துப் பேசுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கோபி- ராதிகாவுக்கு ராமமூர்த்தி கொடுத்த பதிலடி

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

நிலா பாப்பாவின் பிறந்த நாளுக்கு வந்திருந்த பாக்கியாவின் நண்பர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பாக்யாவுடன் படிக்கும் பெண்மணி ஒருவர் எல்லோரையும் பார்த்துட்டேன் உங்க ஹஸ்பண்ட் எங்கே என கேட்க பிறகு பாக்கியா இருவருக்கும் விவாகரத்தான விஷயத்தை சொல்கிறார்.அதன் பிறகு நண்பர்கள் கிளம்பும்போது பழனிச்சாமி பாக்யாவின் தன்னம்பிக்கையை பாராட்டி அவரிடம் சிரித்து பேசிக் கொண்டிருக்க அப்போது காய்கறி வாங்க வெளியே வரும் கோபி இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பக்கத்திலேயே எழில் போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து டேய் உங்க அம்மாவை பாருடா என புலம்புகிறார். ஆனாலும் கோபி எதுவும் சொல்ல முடியாமல் அங்கிருந்து நகர்கிறார்.


அடுத்து இனியா வீட்டுக்கு கிளம்பும்போது இப்பதான் உன்னுடைய அருமை எனக்கு புரியுது நீ ரொம்ப நல்ல அம்மா, மிஸ் யூ என சொல்லி முத்தமிட்டு வீட்டுக்கு கிளம்ப பாக்யா கண்கலங்குகிறார். இனிய ஏண்டா அப்படி சொன்னா அவ நல்லா இருக்காளா அவளுக்கு அந்த வீட்டில ஏதாவது பிரச்சனையா எனக் கேட்க, ஈஸ்வரி அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இருக்காது அதான் அவ கூட அவருடைய தாத்தா இருக்காருல என சொல்கிறார்.

இந்தப் பக்கம் ராதிகா கோபியை சாப்பிட கூப்பிட கோபி இனியா வரட்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு இனியா இன்னும் வரல அவ அந்த வீட்டுக்கு போனா அங்கேயே தங்கிடுவாள்னு பயமா இருக்கு என சொல்ல அப்படின்னா எதுக்கு அவளை அங்க அனுப்புறீங்க.? ஏதாவது காரணம் சொல்லிட்டு வாரத்துல மூணு நாள் அங்க போயிருடா, அங்கே எதுக்கு போகணும் போகக்கூடாது என்று சொல்லுங்கள் என சொல்லிக் கொண்டிருக்க அப்போது இனியா வந்து விடுகிறார்.


என்னை பத்தி என்ன போட்டு கொடுக்குறீங்க என சொல்ல உன்னை பற்றி நான் எதுக்கு போட்டு கொடுக்கணும் ஆமா நீ எதுக்கு அந்த வீட்டுக்கு போற? அங்கு தான் வேணான்னு சொல்லிட்டு  இங்க ஓடி வந்த அப்புறம் எதுக்காக போற என கேட்க அங்கு எல்லாம் வேணாம்னு சொல்லிட்டு ஓடி வரல டாடி நாங்க போகக்கூடாது என்று சொல்ல நீங்க யாரு என கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரிக்க ராமமூர்த்தி தலையிட்டு நீ ஏன் அவளை அங்க போகக்கூடாது என்று சொல்ற அது சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு என கேட்டு ஷாக் கொடுக்கிறார். 

எதுக்கு சண்டை போட்டு எல்லாருடைய சந்தோஷத்தை கெடுக்கிற என கேட்க நான் உங்க சந்தோசத்தை கெடுக்குறேனா? நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கீங்க நான் தான் சந்தோஷம் நிம்மதி இல்லாம இருக்கேன் என ராதிகா சொல்கிறார்.


மேலும் ராமமூர்த்தி நான் அன்னைக்கே இந்த கல்யாணம் பண்ணாதனு தலப்பா டா அடிச்சுக்கிட்டேன் என் பேச்சை கேட்டியா என சொல்ல பார்த்தீங்களா உங்க அப்பா என்ன சொல்றாரு என கோபியிடம் சண்டைக்கு போக கோபி கொஞ்சம் அமைதியா இரு என ராதிகாவை சொல்ல நான் தான் அமைதியா இருக்கணுமா? இவங்கள எதாவது சொல்றீங்களா என சண்டை போடுகிறார். இதனால் கோபி செய்வதறியாது தவிக்கிறார். இத்துடன்  எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement

Advertisement