• Apr 25 2024

ஈஸ்வரியை எதிர்த்து பாக்கியாவை ஊருக்கு கூட்டுக்கொண்டு சென்ற ராமமூர்த்தி- கோபி போட்ட புதுத் திட்டம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் இனியா வெளியே வந்து வீட்டை பார்த்துக் கொண்டிருக்க அப்போது எழில் பால்கனியில் இருந்து பார்த்துவிட்டு கீழே வந்து இனியாவிடம் பேசுகிறார். இனியா டாடி இந்த வீட்டை விற்கப் போறதா சொன்னது கொஞ்சம் கூட நல்லாவே இல்ல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என அழுகிறார்.

எழில் அதெல்லாம் ஒன்றும் இல்லை இந்த வீட்டை கண்டிப்பாக நாம் வாங்கத்தான் போறோம் எல்லாரும் ஒண்ணா இந்த வீட்ல இருக்கலாம் என சொல்லி சமாதானம் செய்ய தாத்தா இதை பார்த்து விடுகிறார்.


மறுநாள் காலையில் வீட்டுக்கு வரும் ராமமூர்த்தி முக்கிய முடிவெடுத்து இருப்பதாக சொல்ல ஈஸ்வரி என்னவென்று கேட்கிறார். ஊரில் இருக்கும் சொத்தை எல்லாம் விற்று இந்த வீட்டை வாங்கப் போவதாக சொல்ல ஈஸ்வரி உட்பட எல்லோரும் மறுப்பு தெரிவிக்க ராமமூர்த்தி உறுதியாக இருக்கிறார். பாக்கியா வேண்டாம் என சொல்லி கேட்காமல் பாக்கியவை அழைத்துக் கொண்டு ஊருக்கு கிளம்பி செல்கிறார்.


அடுத்து ஈஸ்வரி கோபியை வீட்டுக்கு வரவைத்து நீ செய்யறது எல்லாம் நல்லா இருக்கா என கேட்க கோபி நான் மனம் மாறி வாழ ஓகே சொன்னா போதும் பாக்கியா தான் என்ன கூட்டிட்டு போயிட்டு விவாகரத்து கொடுத்தா, பிளான் பண்ணி என்னை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புனா, அப்புறம் நான் என்ன பண்ண முடியும் எனக்கான வாழ்க்கையை நான் தேடிக்கிட்டேன், அப்பவும் என்னை நிம்மதியா இருக்க விடாமல் இருந்தால் என்ன செய்வது எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு, உங்கள நான் கஷ்டப்பட விடமாட்டேன்.


எக்காரணம் கொண்டும் இந்த வீடு பாக்யா கைக்கு போக நான் அனுமதிக்கவே மாட்டேன், என சொல்லி கிளம்பி செல்கிறார். அடுத்து எழில் தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவராக சந்தித்து கதையை விற்க முயற்சி செய்ய எல்லோரும் தட்டிக் கழிக்க என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். சதீஷ் வர்ஷினியோட அப்பா பெரிய ஆளு அவரை எதிர்த்து யாரும் கதையை வாங்க மாட்டாங்க என சொல்ல எழில் யோசிக்கிறார். இத்துடன் இன்றைய  எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement

Advertisement