• Mar 29 2024

சுவர் ஏறிக் குதித்து திருமணம் செய்து கொண்ட தேவயானி... ஒதுக்கி வைத்த நகுல்... காரணம் ரஜினியின் மகள்கள் தானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தமிழ் இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமாரிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் ராஜகுமாரன். 'சூரியவம்சம்' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியபோது அப்படத்தின் நாயகியான தேவயானி மீது ராஜகுமாரனுக்கு காதல் மலர்ந்தது. 


இப்படத்தினைத் தொடர்ந்து இயக்குநராக காலடி எடுத்து வைத்த ராஜகுமாரன், தான் இயக்கும் படங்களில் எல்லாம் தொடர்ச்சியாக தேவயானியை நடிக்க வைத்து வந்தார்.

இவர்கள் இருவரினதும் காதல் விவகாரம் தேவயானியின் வீட்டுக்கு தெரிந்ததும், கடும் எதிர்ப்பு கிளம்பியது. குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கடந்த 2001 ஆம் ஆண்டில் நடிகை தேவயானி ராஜகுமாரனை ரகசியத் திருமணம் செய்துகொண்டார்.


மேலும் வீட்டின் சுவர் ஏறி குதித்து வந்து தான் தேவயானி திருமணம் செய்துகொண்டதாக அப்போது செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

திருமணத்தைத் தொடர்ந்து படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட தேவயானி, ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார். குறிப்பாக இவர் நடித்த 'கோலங்கள்' என்ற சீரியலானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. 


தேவயானிக்கும் ராஜகுமாரனுக்கும் திருமணமாகி 21 ஆண்டுகள் கடந்து விட்ட போதும், நடிகை தேவயானியின் தம்பி நகுல், இன்றுவரை அவர்களுடன் பேசாமல் இருந்து வருகிறாராம். அவ்வாறு நகுல் தங்களுடன் பேசாததற்கான காரணம் குறித்து ராஜகுமாரன் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். 


அதாவது "நகுல் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி நடத்தி வரும் பள்ளியில் தான் கல்வி பயின்றதாகவும், ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் நகுலின் நெருங்கிய நண்பர்கள் என்றும் தெரிவித்த ராஜகுமாரன், தேவயானி திருமணம் என்னை  திருமணம் செய்து கொண்ட போது, ரஜினியின் மகள்கள் இருவரும் நகுலை கிண்டல் செய்திருக்க கூடும்" எனக் கூறியுள்ளார்.

மேலும் "அதனை அவமானமாக எண்ணி தான் நகுல் இன்னும் என்னிடம் பேசாமல் இருக்கின்றான்" எனத் தனது யூகத்தை ஆதங்கமாக கூறியுள்ளார் ராஜகுமாரன். எது எவ்வாறாயினும் தேவயானியும், ராஜகுமாரனும் சிறந்த கணவன் மனைவிக்கு அடையாளமாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement