• Apr 19 2024

போனில் ஆறுதல் கூறியும் மனம் பொறுக்காமல் மீனாவின் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அந்த வகையில் அண்மையில் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படத்தில் இறுதியாக நடித்திருந்தார்.

இவரது கணவரும் பிரபல தொழிலதிபருமாகிய வித்யாசாகர் என்பவர் நேற்றைய தினம் நுரையீரல் பிரச்சினை காரணமாக இறப்புக்குள்ளானார்.இவருடைய இந்த எதிர்பாராத இழப்பிற்கு உறவினர்கள் நண்பர்கள் திரைப்பிரபலங்கள் என அனைவரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் விஷால், ஜெயம் ரவி ,குஷ்பு ,சரத்குமார், மன்சூர் அல்கான் எனப் பலரும் நேரில் சென்றும் சமூக வலைத்தளங்களின் மூலமும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினியும் மேீனாவுக்கு போன் செய்து தனது ஆறுதலைத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மனம் பொறுக்காமல் நேரடியாகச் சென்று தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement