• Mar 28 2024

புற்று நோயால் பாதிக்கப்பட்ட தீவிர ரசிகனுக்கு சைலண்டாக உதவி செய்து வந்த ரஜினிகாந்த்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.இவர் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதனால் அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என்று நம்பப்படுகின்றது.

மேலும் கர்நாடகாவில் சாதாரண பஸ் கண்டெக்டராக இருந்த இவர் இன்று இந்த அளவுக்கு உயர்ந்து தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகராக உள்ளதற்கு காரணம் தமிழ்நாட்டு மக்கள் தான் காரணம் என சொல்வதும் உண்டு.இதனால் தான் இவர் எங்கு சென்றாலும், எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், ‘என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களே’ என்பதை தவறாமல் சொல்லி விடுவார்.


மேலும் இவரது ரசிகர்கள் இவரது பெயரில் நற்பணி மன்றம்  தொடங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி நற்பணி மன்றத்தின் தலைமை நிர்வாகியும், சூப்பர்ஸ்டாரின் நெருங்கிய நண்பருமான சுதாகர் என்பவர் டுவிட்டரில் ரஜினி பற்றி பரவும் போலி செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது : “தலைவர் ரஜினிகாந்தின் அபரிமிதமான நன்மதிப்பைக் குலைப்பதற்காக இணையத்தில் ஒரு பொய்ப் பிரச்சாரம் உலா வருகிறது. இந்த இக்கட்டான காலங்களில் தலைவர் எனக்கு உதவவில்லை என்ற செய்தி முற்றிலும் போலியானது. உண்மையில் எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவச் செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் தலைவர். 


இப்போது வரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார், அதற்காக எங்கள் முழு குடும்பமும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். எனது சிகிச்சைக்கான நிதி சேகரிக்கும் பிரச்சாரத்தை எனது மகனின் நண்பர்கள் எனக்குத் தெரியாமல், அவர்களால் முடிந்த நிதியுதவியை வழங்குவதற்காக தொடங்கினார்கள். தலைவர் எங்களுக்கு உதவாததால் இது தொடங்கப்பட்டது என்ற செய்தி போலியானது. இது தலைவரின் நல்லெண்ணத்தையும் குணத்தையும் பாதித்துள்ளதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement