• Apr 24 2024

14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜனி-வடிவேல் கூட்டணி-எந்த படத்திற்கு தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள ‘தலைவர் 170’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகின்றது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, ஷிவ்ராஜ்குமார், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி என முக்கிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.



ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து முடிக்கும் முன்னரே அடுத்ததாக நடிக்க உள்ள 2 படங்கள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.மேலும்   இந்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது. அதில் ஒரு படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார். மற்றொரு படத்தை இயக்க இரண்டு, மூன்று இயக்குனர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.



இவ்வாறுஇருக்கையில்  ரஜினி - சிபி சக்ரவர்த்தி கூட்டணியில் உருவாகவுள்ள ‘தலைவர் 170’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக சொல்லப்படுகின்றது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு ரஜினி - வடிவேலு கூட்டணிக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. இவர்கள் இருவரும் இதுவரை இணைந்து நடித்துள்ள சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் காமெடி வேறலெவல் ஹிட் ஆகின. இதில் குசேலன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும், அதில் இடம்பெறும் காமெடி காட்சிகள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement