• Mar 29 2024

மகளின் படத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்து பேசிய ரஜினி... ஓ அப்போ சம்பவம் உண்மைதானா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன. இவரது நடிப்பில் இறுதியாக 'அண்ணாத்த' என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில் தனது அடுத்த படத்தின் இயக்குநராக நெல்சனை ரஜினி தேர்வுசெய்துள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் பிரமாண்டமாக இசையமைக்கிறார். சில நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் அறிவிப்பினால் ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இதனைத் தொடர்ந்து ரஜினியின் 170-ஆவது படத்தை 'டான்' பட புகழ் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாகவும், 'தலைவர் 171' படத்தை தேசிங்கு பெரியசாமி வித்தியாசமான கதையில் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மூன்றாவது படத்தை இயக்கவுள்ளார். 


அதாவது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க அதர்வா உள்ளிட்ட சில இளம் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கிடையே கதையை ரஜினியிடம் விவரித்த ஐஸ்வர்யா, அவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க கோரிக்கை வைத்துள்ளாரம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் ரஜினி அதனை உறுதி செய்துள்ளார். 

அதாவது தனது மகள் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ள அனுபவம் குறித்து முதன் முதலாக மனம் திறந்து பேசியுள்ளார் ரஜினி. அந்தவகையில் சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்த ரஜினியை வழிமறித்த செய்தியாளர்கள் "உங்கள் மகளின் படத்தில் நடிக்கின்றீர்கள், அந்த அனுபவம் எப்படி இருக்கு" எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு உடனே ரஜினி சிரிச்சுக்கிட்டே "ரொம்பவே சூப்பராக இருக்கின்றது" எனக் கூறிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு மென்மேலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக் கிளம்பத் தொடங்கியிருக்கின்றது. ஏனெனில் ரஜினியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்க்கும் போது படம் கண்டிப்பாக சூப்பராகத் தான் இருக்கும் எனக் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement