• Mar 29 2024

பிரம்மாண்டமாக உருவாகவுள்ள 'ரஜினி முருகன் 2'... எல்லாமே ரெண்டா... இயக்குநர் வெளியிட்ட வேற லெவல் அப்டேட்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கலக்கல் நாயகனாகவும் காமெடி நாயகனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவாகும் படங்களில் என்றைக்குமே சிரிப்பிற்குப் பஞ்சம் இருக்காது. அந்தவகையில் இவரின் சினிமா கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற படம் தான். 


பொன்ராம் இயக்கத்தில் உருவான இப்படத்தில் போஸ் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நகைச்சுவை கலந்த பாணியில் நாயகனாக நடித்து அசத்தி இருந்தார் சிவகார்த்திகேயன். அதுமட்டுமல்லாது இப்படத்தில் சூரி உடன் சேர்ந்து இவர் அடிக்கும் டைமிங் காமெடிகள் இன்றளவும் ரசிகர்களால் அதிகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் கொடுத்த பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து 'ரஜினிமுருகன்' என்ற படத்தை இயக்கினார் பொன்ராம். இப்படத்தைப் போன்றே ரஜினி முருகனும் காமெடி கலாட்டா நிறைந்த ஒரு படமாக இருந்ததால் இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. 

அத்தோடு இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இவ்வாறாக சிவகார்த்திகேயனை வைத்து இரண்டு முத்தான திரைப்படங்களை கொடுத்த இயக்குநர் பொன்ராம், அடுத்ததாக இயக்கிய 'சீமராஜா, எம்.ஜி.ஆர்.மகன்' ஆகிய இரண்டு படங்களும் எதிர்பாராத விதமாகத் தோல்வியை தழுவின. 

இதனைத் தொடர்ந்து தற்போது இவர் இயக்கத்தில் 'டிஎஸ்பி' என்ற திரைப்படம் தயாராகி உள்ளது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இப்படமானது வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் வெகு ஜோராக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இயக்குநர் பொன்ராமிடம் "இரண்டாம் பாகம் இயக்கும் ஐடியா இருக்கிறதா" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் தனக்கு யுனிவர்ஸ் உருவாக்கும் ஐடியா இருப்பதாக கூறினார்.

அதாவது இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கைதி படத்தை விக்ரம் படத்தோடு இணைத்திருந்தது போல் தனது படங்களையும் இணைக்க உள்ளதாக மிகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் பொன்ராம்.


அதன்படி அவர் கூறுகையில், தனது இயக்கத்தில் வெளியான ரஜினிமுருகன் படத்தின் இறுதி காட்சியில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் போஸ் பாண்டி கேரக்டர் திடீரென இடம்பெறுவது போல் காட்டி இருப்பேன்.

அதேபோல் ரஜினிமுருகன் இரண்டாம் பாகத்தில் இரண்டு சிவகார்த்திகேயன், இரண்டு சூரி, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யா, நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரை மையமாக வைத்து கதை ஒன்றினை தயார் செய்து விட்டதாக கூறி உள்ளார்.


மேலும் அதற்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்த பொன்ராம், இந்த ஐடியாவை சிவகார்த்திகேயனிடம் சொன்னபோது அவருக்கும் ரொம்பவே பிடித்துப்போனது. எனவே இருவருக்கும் நேரம் கிடைக்கும் போது இப்படம் நடக்கும் என பொன்ராம் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதை அறிந்ததும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சந்தோசத்தின் உச்சத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement