• Mar 29 2024

பிரபல தயாரிப்பாளரை குடிக்க வைக்க முயன்ற ரஜினி... அவரே உண்மையை போட்டு உடைத்தார்...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கே.பாலசந்தரால் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டு வில்லனாக, துணை நடிகராக, 2ஆம் கதாநாயகனாக, நடிகராக, சூப்பர் ஸ்டாராக படிப்படியாக வளர்ச்சி அடைந்தவர். 


ரஜினி சினிமாவில் நடிக்க வரும் போதே நடிகர் கமல் ஒரு அந்தஸ்தான நடிகராக இருந்தார். அதன் பின் முதன் முதலில் ‘பைரவி’ படத்தின் மூலம் தான் கதாநாயகனாக நடித்தார். அவரை முதன் முதலில் கதாநாயகனாக்கியவர் எழுத்தாளர் கலைஞானமாகும்.


அந்தப் படத்தின் மூலம் தான் அவரின் நடிப்பு பலருக்கு அறியப்பட்டது. அதனை அடுத்து வெற்றிக் கனிகள் அவரை தேடி வந்தன. ரஜினி சினிமாவில் ஒரு பக்கம் முன்னேறி வந்தாலும் தன் பழக்க வழக்கங்களால் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டொழிந்து வந்தார்.


இதை பற்றி அவரே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார். ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட் சிகரெட் போகும் என்றே தெரியாதாம். அதே போல் இரவில் கண்டிப்பாக மது குடிக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது. சில சமயங்களில் காலையிலேயே பாட்டிலுடன் உட்கார்ந்து விடுவாராம்.


இவையெல்லாவற்றையும் தாண்டி தினமும் மாமிசம் இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். இந்த நிலையில் பிரபல நடிகரும் பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராகவும் இருந்த பிரமிடு நடராஜன் ரஜினியை பற்றி ஒரு பேட்டியில் கூறினார்.


 ரஜினிக்கு குடிப்பழக்கம் உடைய நண்பர்கள் கிடைத்தால் நடராஜனை தேடவே மாட்டாராம். கிடைக்கவில்லை என்றால் நடராஜனை அழைத்து இரவு இரண்டு மணிவரைக்கும் பேசிக் கொண்டே இருப்பாராம். அதுவும் பேசும் போது ரஜினி சிகரெட் பிடித்துக் கொண்டே பேசுவாராம். ஆனால் பிரமிடு நடராஜன் சரியான டீ டோட்லர். எந்தப் பழக்கமும் இல்லாத நபராம்.


ஒரு நாள் ‘வேலைக்காரன்’ படப்பிடிப்பின் போது நடராஜனின் மனைவியிடம் ரஜினி ‘மாமி, இந்த செட்யூலுக்குள் உங்க ஆத்துக்காரரை நான் குடிக்க வைத்து விடுவேன், அதன் பிறகு என்னை எதுவும் சொல்லக் கூடாது’ என்று சபதம் போட்டு சொன்னாராம். ஆனால் அது பிரமிடு நடராஜனிடம் பலிக்கவில்லை. இதை ஒரு பேட்டியில் பிரமிடு நடராஜனே கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement