• Apr 19 2024

பாகுபலி படத்தில் நடிக்க பிரபல நடிகைக்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்க முடியாது என்று கூறிய ராஜமௌலி- அடடே இவருக்கா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் நடித்த நட்சத்திரங்கள் பலர் பல கோவில்களை கட்டி கொடுத்திருக்கின்றனர். பலர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில், ராகவா லாரன்ஸ் கட்டிய ராகவேந்திரா கோவில், யோகிபாபு கட்டிய வாரகி அம்மன் கோவில் என பலர் கோவில்களை காட்டியிருக்கின்றனர். ஆனால் அதனை தாண்டி சுமார் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை திருப்பதி ஏழுமலையானுக்கு தானமாக கொடுத்துள்ளார் பழம்பெரும் நடிகையான காஞ்சனா.

இவரது இயற்பெயர் வசுந்தரா தேவி. இவர் தொடக்கத்தில் விமானத்தில் பணிபுரியும் பணிப்பெண்ணாக இருந்து 1964ஆம் ஆண்டு வெளியான காதலிக்க நேரமில்லை என்ற படத்தின் மூலம் தான்  இயக்குநர் ஸ்ரீதர் இவருக்கு காஞ்சனா என்ற பெயரை வைத்தார். ஏனென்றால் அப்போது வசுந்தரா தேவி என்ற பெயரில் நடிகை வைஜயந்தி மாலாவின் தாயும் இதே பெயரில் நடித்து கொண்டிருந்ததால் இந்த காஞ்சனா என்ற பெயர் மாற்றத்துடன் அறிமுகமாகினார் வசுந்தரா தேவி.


இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் வாய்ப்புகள் குவியத்தொடங்கின. தொடர்ந்து படங்களில் படங்களில் வருடங்கள் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த காஞ்சனா சமீபத்தில் அர்ஜுன் ரெட்டி நடித்த படத்தில் நடித்திருந்தார். .

இவர் கொடுத்துள்ள சொத்துக்களில் தி.நகர், ஜி.என் செட்டி சாலையில் உள்ள 40 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலமும் அடங்கும், அங்குதான் பத்மாவதி கோவிலும் தற்போது கட்டப்பட்டுள்ளது. அங்குதான் இந்த சொத்து பல போராட்டங்களுக்கு பிறகு கடவுளின் அருளால் கிடைத்தது. அதனால் தான் இந்த சொத்தை மக்களுக்கு கொடுத்து விட்டேன் என்று தெரிவித்திருந்தார் காஞ்சனா. மேலும் நடிகை காஞ்சனா சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர் ராஜமௌலியை விமர்சித்து பேசியுள்ளார்.


அதாவது “ராஜமவுலியின் சிறந்த படங்களில் ஒன்றான “பாகுபலி” படத்தில் காஞ்சனா நடிக்க இயக்குநர் ராஜமவுலி அணுகியிருக்கிறார். படத்தில் இரண்டு நாட்கள் நடிக்க கால்ஷீட்டும் கேட்டிருக்கிறார் ராஜமௌலி. காஞ்சனா பாகுபலி படத்தில் நடிக்க 5 லட்சம் சம்பளமாக கேட்டிருக்கிறார். ஆனால் இயக்குநர் ராஜமௌலி அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என தவிர்த்து விட்டாராம்.


மேலும் நேர்காணலில் பேசிய காஞ்சனா “ஒரு பழம்பெரும் நடிகைக்கு 5லட்சம் ரூபாய் கூட குடுக்க முடியாத நிலையில் ராஜமௌலி இருக்கிறாரா? 5 லட்சம் ரூபாய் என்பது  பெரிய தொகையா?. என்னை போன்ற நடிகைக்கு அவர் அந்த தொகையை கொடுத்தால் எத்தனை பேருக்கு உபயோகமான இருந்திருக்கும் என்று விமர்சித்துள்ளார். இப்படி இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் 80 கோடியை தானமாக கொடுத்த ஒருவருக்கு 5 லட்சம் பெரிய விஷயமா என்று ராஜமௌலியை விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


Advertisement

Advertisement

Advertisement