• Apr 20 2024

ரகுவரன் இப்படிப்பட்ட ஒருவர் தான்... அதனால் தான் இறுதியில் அழிந்து ஒழிந்து போனார்... பகீர் கிளப்பிய பிரபலம்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ரகுவரன். 'ஏழாவது மனிதன்' என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர் தொடக்கத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும், இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்கள் தான் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இவ்வாறான ஒரு சிறந்த நடிகர் கடந்த 2008-ஆம் ஆண்டில் மாரடைப்பால் உயிரிழந்தமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இந்நிலையில் ரஜினிகாந்த் ஏன் தொடர்ந்து ரகுவரன் உடன் இணைந்து நடித்தார் என்றும் கமல்ஹாசன் ஏன் ஒரு படத்தில் கூட ரகுவரன் உடன் இணைந்து நடிக்கவில்லை என்பதற்கான காரணத்தையும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வெளிப்படையாக கூறியுள்ளார். அத்தோடு ரகுவரனுக்கு இருந்த அந்த ஒரு கெட்டப்பழக்கத்தினால் தான் அவரது திறமை மொத்தமும் வீணாய்ப் போனதாகவும் கூறி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.


அந்தவகையில் வி.சி. குகநாதன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய மைக்கேல் ராஜ் மற்றும் கைநாட்டு படங்களில் ஹீரோவாக ரகுவரன் நடித்தார். அந்த இரு படங்களுமே 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தன. அதாவது ரஜினிகாந்த் கால்ஷீட் கிடைக்காத நிலையில், ரகுவரனை ஹீரோவாக்கி படத்தை ஹிட் கொடுத்தார் வி.சி. குகநாதன் என பயில்வான் கூறி உள்ளார்.


மேலும் "சினிமாவில் எப்போதுமே வில்லன் எந்தளவுக்கு ஸ்ட்ராங்காக இருக்கிறானோ அந்த அளவுக்கு ஹீரோவுக்கான மாஸ் கிடைக்கும். அதனை ரஜினிகாந்த் ரொம்ப நன்றாக புரிந்து வைத்திருந்தார். பாட்ஷா என ரகுவரன் சொல்வதே அப்படத்தில் மிரட்டலாக இருக்கும். இவ்வாறாக வில்லன்களை ரசிக்க அதிக ரசிகர்கள் இல்லாத நிலையில், ரகுவரனுக்கு என்றே சினிமாவை பார்க்க ஒரு பெரும் ரசிகர் கூட்டம் கூடியதை அறிந்து வைத்துக் கொண்டு தான் பல படங்களில் ரகுவரன் உடன் இணைந்து நடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.


ஆனால், ரஜினிகாந்த் மாதிரி நடிகர் கமல் கிடையாது. எங்கே ரஜினியை போல ரகுவரனும் தன்னைத் தாண்டி வளர்ந்து விடுவாரோ என்ற பொறாமை காரணமாகவே ஒரு படத்தில் கூட ரகுவரன் உடன் இணைந்து கமல் நடிக்கவே இல்லை. கமலைப் பொறுத்தவரை தன்னை விட திறமைசாலிகளுடன் இணைந்து பணியாற்ற மாட்டார்" என்றார்.


மேலும் "நல்லா நடிக்க வேண்டும் என்பதற்காக நிஜமாகவே கையை அறுத்துக் கொண்டு ஒரு படத்தில் நடித்து அனைவரையும் ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் நடிகர் ரகுவரன். ஆனால், அவருக்கு இருந்த ஒரே கெட்டப் பழக்கம் என்றால் அது குடி போதை தான். அதனால் தான் அவரால் பல படங்களில் நடிக்க முடியாமல் போனது என்றும் ஒரு கட்டத்தில் குடித்தால் தான் அவர் நடிப்பார் என்ற நிலைக்கு ஆளாகி விட்டார் என்றும் பயில்வான் அப்பேட்டியில் தெரிவித்திருந்தார்.


அதுமட்டுமல்லாது "நடிகை ரோகிணி ரகுவரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், அவருக்கு இருந்த அதீத குடிப்பழக்கம் காரணமாகவே அவரை விட்டு பிரிந்து வாழ்ந்தார். தமிழ் சினிமாவில் நடிப்பையும் தாண்டி பல நல்ல காரியங்களையும் சமூக சிந்தனையுடன் செயல்பட்டவர் ரோகிணி" என்று ரகுவரனின் மனைவி பற்றியும் கூறியிருந்தார் பயில்வான்.

Advertisement

Advertisement

Advertisement