• Apr 19 2024

இதயம் இதயம் துடிக்கின்றதே... மோடியின் பதிவை ரீ ட்விட் செய்த ரகுமான்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சுதந்திரப் போராட்டத்தையும், வந்தே மாதரம் என்கிற வார்த்தையையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது. அந்தவகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த 'வந்தே மாதரம்' வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் ரீ-ட்விட் செய்து பதிவிட்டிருக்கின்றார்.


அதாவது பிரதமர் நரேந்திர மோடி தீபாவளியை ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டும் கார்கில் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி கொண்டாடினார். அப்போது, தமிழக ராணுவ வீரர்கள் பிரதமரின் மனதைக் கவரும் வகையில் 'சுராங்கனி' என்ற பாடலை பாடி மோடியை வரவேற்றனர். 


இதனையடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த வந்தே மாதரம் பாடலை பாடினர். இதை பிரதமர் மோடி மிகவும் ரசித்துக்கேட்டார்.

பின்னர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்த அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர் என்று அவர்களை புகழ்ந்து கூறி அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 


பிரதமர் மோடியின் இந்த ட்விட் பதிவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரீ-ட்விட் செய்துள்ளார். அதில் "இதயம் இதயம் துடிக்கின்றதே, எங்கும் உன்போல் பாசம் இல்லை, ஆதலால் உன் மடி தேடினேன். தாய் மண்ணே வணக்கம் என்று தீபாவளி வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார் ரகுமான். அவரின் இந்தப் பதிவிற்குப் பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement