• Apr 25 2024

தெருவுக்கு வந்த கோபியைப் பார்த்து கை கொட்டிச் சிரித்த அவரது அப்பா- ஆட்டத்தை ஆரம்பித்த ராதிகா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி.அந்த வகையில் இன்றைய தினம் என்ன நடந்தது என்று பார்ப்போம். கோபி ராதிகாவை பார்க்க என்ன கோபி அப்படி பாக்குறீங்க நான் அவ்வளவு அழகா இருக்கிறனா என கேட்க அதெல்லாம் இல்ல ஒரு காபி கிடைக்குமா என்று கோபி கூறுகிறார். அதற்கு ராதிகா நான் அப்போ அழகா இல்லையா என மடக்கிக் கேள்வி கேட்கிறார்.

 யார் சொன்னது நீ பியூட்டிஃபுல்லா இருக்க என கோபி சமாளிக்கிறார். பிறகு மீண்டும் எனக்கு நீ சாப்பாடு கூட போட வேணாம், காலையில மதியம் நைட்டு நான் அடிக்கடி காபி குடிப்பேன் எனக்கு காலையில ஆபீஸ் முடிச்சிட்டு வந்ததும் காபி கொடுத்தா போதும் அதை குடிச்சிட்டு நான் உயிர் வாழ்ந்திடுவேன் என கெஞ்சுகிறார்.


அதன் பிறகு ராதிகா எதுக்கு இப்படி எல்லாம் கெஞ்சுகிட்டு இருக்கீங்க  காபி வேணும்னு கேட்டா போட்டுக் கொடுக்கப் போறேன் என சொல்லிவிட்டு பேப்பர் படிக்க பிறகு மீண்டும் கோபி காபி என கேட்க பால் இல்ல போயிட்டு பால் வாங்கிட்டு வாங்க காபி போட்டு தரேன் என சொல்கிறார். என்னது கடைக்கு நான் போகணுமா என கேட்க ஆமா ஏன் போக மாட்டீங்களா என ராதிகா கேட்க அப்படியெல்லாம் இல்லை என கோபி சமாளிக்க பிறகு ராதிகா பால் வாங்கிட்டு வர அனுப்பி வைக்கிறார்.

பால் வாங்கிட்டு வரும்போது கோபியின் அப்பா கண்ணில் சிக்கிவிட அவர் போனில் யாரிடமும் பேசுவது போல கோபியின் நிலைமையை கிண்டல் அடிக்கிறார். கேட்ட நேரத்துக்கு காபி கிடைக்கும் இந்த வாழ்க்கை எல்லாம் வேண்டாம் என்று புது வாழ்க்கையை தேடி போன, ஊரைக் கூட்டி கல்யாணம் பண்ணின இன்னும் நீ என்ன எல்லாம் படப்போறனு பார்க்கத்தானே போறோம் என கைகொட்டி சிரிக்க கோபி கடுப்பாகி வீட்டுக்கு வந்து விடுகிறார்.


வீட்டுக்கு வந்து பார்த்தால் ராதிகா டப்போடு பிஸியாக இருக்க இன்னைக்கு காபி கிடைச்சா மாதிரி தான் என புலம்ப பிறகு மயூ ஸ்கூலுக்கு கிளம்ப கோபி ஆபீசுக்கு கிளம்ப அப்போது ராதிகா காபி கொடுக்க கோபி சந்தோஷமாக காபி குடித்துக் கொண்டிருக்க டிபன் என சொல்லி உப்புமாவை எடுத்து வந்து கொடுக்க கோபி ஷாக் ஆகிறார். பிடிக்காத உப்புமாவை மனம் இல்லாமல் கோபி சாப்பிடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement

Advertisement